தேசிய கீதம் பாடி அசத்திய தான்சானிய நாட்டு அண்ணன் தங்கை - லட்சக்கணக்கான மனங்களை கவர்ந்த ரீல்ஸ்
நாட்டின் 73வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் தான்சானியா நாட்டு பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த சகோதர சகோதரி பாடிய ஜன கன மன பாடல் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டுள்ளது.
சென்னை: தேசிய கீதத்தை பாடும் போதும் பிறர் பாட கேட்கும் போதும் சரி உள்ளத்தில் தேச பக்தி பொங்கும். நாட்டின் 73வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் தான்சானியா நாட்டு பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இருவர் பாடியுள்ள ஜன கன மன... தேசிய கீதம் பாடல் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டுள்ளது.
Recommended Video
பேஸ்புக், ட்விட்டரில் பலரும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அதிலும் பலரது வீடியோக்கள் பார்ப்பவரிகளின் மனதை கொள்ளை கொள்ளும். இந்தி பாடலோ, தெலுங்கு பாடலோ எந்த பாடலாக இருந்தாலும் அதற்கேற்ப வாயசைத்து அசத்தி வருகிறது ஒரு ஜோடி.
தான்சானியா நாட்டைச் சேர்ந்த ஒரு பழங்குடியின இனத்தைச் சேர்ந்த இவர்கள் அண்ணன் தங்கை. தங்களுடைய பகுதியில் இருந்து கொண்டு இந்தி, தெலுங்கு பாடலுக்கு ஏற்ப அழகாக வாய் அசைத்து சிறப்பாக நடனமாடி பலரது மனதை கொள்ளை கொண்டுள்ளனர். அவர்களது இன்ஸ்டா கிராம் பக்கத்தை பல லட்சம் பேர் ஃபாலோ செய்கின்றனர்.கிலி பால் நீமா ஜோடி தங்களுடைய பாரம்பரிய உடையை அணிந்து ரீல்ஸ் செய்யும் வீடியோ தான் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. தமிழ், தெலுங்கு இவர்களின் ரீல்ஸ் வீடியோக்கள் பல லட்சம் பேரை சென்றடைந்துள்ளது.
நாட்டின் 73வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் இந்த ஜோடி ஜன கன மன அதிநாயக ஜய ஹே.. என்று இந்திய தேசிய கீதத்தை பாடி ரீல்ஸ் வீடியோவாகப் பதிவிட்டுள்ளனர். நெஞ்சில் கை வைத்து தேச பக்தியோடு உணர்ச்சி பெருக்கோடு பாடியுள்ளனர். இவர்களின் பாடலுக்கு பல்லாயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர். அவர்கள் வீடியோ போட்ட சில நிமிடங்களில் மூன்று லட்சம் பேரை சென்றடைந்துள்ளது.