ஆப்பிள் நிறுவனம் வெற்றி பெற்ற கதை... ரகசியம் சொன்ன விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
சென்னை: இந்தியாவின் முகவரியாக வரும் காலங்களில் தொழில்நுட்பம் தான் இருக்கும் என்று விஞஞானி மயில்சாமி கூறியுள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், அறிவுசார் சொத்துரிமை குறித்த, இரண்டு நாள் பயிலரங்கம், நேற்று துவங்கியது. மருத்துவ பல்கலை துணைவேந்தர், சுதா சேஷய்யன் தலைமை வகித்தார். இதில், விஞ்ஞானியும், மாநில அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில் துணைத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவில் எத்தனையோ கண்டு பிடிப்புகளும் கலைகளும் படைக்கப்பட்டு உள்ளன. அவை அனைத்துக்கும் காப்புரிமை பெற்று காப்பாற்ற நாம் தவறி விட்டோம். ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர், ஸ்டீவ் ஜாப்ஸ், 299 பொருட்களுக்கு காப்புரிமை பெற்றிருந்தார்.

வெற்றிக்கு முக்கிய காரணம்
ஆப்பிள் போன்களுக்கு பயன்படுத்தப்படும், சார்ஜர்களின் முனையில் உள்ள 'பின்'களுக்கும், அவர் காப்புரிமை பெற்றிருந்தார். அதனால் தான், அந்த வகையான பின்களை பிற நிறுவனங்கள் தயாரிக்க முடியவில்லை. அதுதான், அவரது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

1,330 குறள்களுக்கும் காப்புரிமை
அறிவுசார் சொத்துரிமை என்பது, புதிய படைப்புகளை பாதுகாப்பதற்கு மட்டுமின்றி, அதை வர்த்தகப்படுத்தவும் வழிவகுக்கும். இதுபோன்ற சட்டங்களும், நடைமுறைகளும், பல நுாற்றாண்டுகளுக்கு முன் இருந்திருந்தால், உலகத்திற்கு நீதி நெறியை போதித்த திருவள்ளுவர், 1,330 குறள்களுக்கும் காப்புரிமை பெற்றிருப்பார்.

காப்புரிமை அவசியம்
இந்தியாவின் முகவரியாக, வரும் காலங்களில், தொழில்நுட்பம் தான் இருக்கும். எனவே, தொழில்நுட்பங்களை அடுத்த தலைமுறையிடம் சேர்க்க வேண்டுமானால் அதற்கு காப்புரிமை அவசியம் என்பதை உணர வேண்டும் என்றார்.

மழைநீரை சேமிக்க வேண்டும்
முன்னதாக, வரும் காலகட்டங்களில் அதிக செயற்கைகோள்களை உருவாக்க வேண்டிய நிலையில் இந்தியா உள்ளதாக தெரிவித்தார். மேலும், பருவநிலை மாற்றங்களால், மழைப்பெழிவை துல்லியமாக கணிக்க முடியாது என்றும், ஏரி குளங்களை பாதுகாத்து மழைநீரை சேமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வீடுவீடாக மழை நீரை சேமித்தால் மட்டுமே வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும் என்றும் விஞஞானி மயில்சாமி தெரிவித்தார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications