முக்கிய கட்டத்தை எட்டிய இந்தியா.. மகப்பேறு விகிதம் 1.9 ஆக குறைந்தது.. அடுத்து என்ன நடக்கும்?
சென்னை: ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியம் (UNFPA) நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த மகப்பேறு விகிதம் (Total Fertility Rate - TFR) தற்போது 1.9 ஆக உள்ளது. இது மக்கள் தொகை நிலைநிறுத்த விகிதமான 2.1-ஐவிட குறைவாகும்.
மொத்த மகப்பேறு விகிதம் என்பது, ஒரு பெண் தனது வாழ்நாளில் பெற்றெடுக்கும் குழந்தைகள் எண்ணிக்கையின் சராசரி. மக்கள் தொகை நிலைநிறுத்த (replacement) விகிதம் 2.1 ஆகும். அதாவது, ஒரு தலைமுறை மக்கள் எண்ணிக்கை அடுத்த தலைமுறையிலும் அதே அளவு தொடர, ஒரு பெண் சராசரியாக 2.1 குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும்.
கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவர் வயதாகி இறந்துவிட்ட பிறகு அவர்களுக்கு ஈடாக 2 பேர் இந்த உலகத்தில் இருக்க வேண்டுமல்லவா. அதனால்தான் 2 என்ற நிலைநிறுத்த விகிதம் முக்கியமானது. இதில் 0.1 என்பது குழந்தை மரணம், பாலின விகிதம் போன்ற காரணிகளுக்காக சேர்க்கப்படுகிறது. 2.1 என்ற அளவுக்கு இருந்தால்தான், 2 பேருக்கு ஈடாக இன்னும் 2 பேர் இந்த உலகில் பிறப்பார்கள் என்று அர்த்தம். இப்போது அது 1.9க்கு குறைந்துள்ளதாம்.

மகப்பேறு விகிதம் குறைவதால் என்ன நடக்கும்?
- மகப்பேறு விகிதம் 2.1-ஐவிட குறைவாகும் போது, ஒரு தலைமுறை மக்கள் எண்ணிக்கை அடுத்த தலைமுறையிலும் அதே அளவு தொடர முடியாது.
- இதனால், நீண்ட காலத்தில் மக்கள் தொகை வளர்ச்சி மெல்ல குறைந்து, ஒரு கட்டத்தில் குறையத் தொடங்கும்.
- தற்போது இளம் மக்கள் அதிகம் இருப்பதால், மக்கள் தொகை இன்னும் சில ஆண்டுகள் அதிகரிக்கும். ஆனால் பிறப்புகள் குறைவதால், 30-40 ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி நின்று, பின்னர் குறையத் தொடங்கும்.
Replacement Rate (நிலைநிறுத்த விகிதம்) என்றால் என்ன?
- நிலைநிறுத்த விகிதம் என்பது, ஒரு பெண் வாழ்நாளில் சராசரியாக 2.1 குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும் என்பதாகும்.
- இரண்டு பெற்றோர்களுக்கு ஈடாக அவர்களுக்கு 2 குழந்தைகள் வேண்டும்; கூடுதலாக 0.1 என்பது குழந்தை மரணம், பாலின விகிதம் போன்றவற்றுக்காக சேர்க்கப்படுகிறது.
- இது 2.1-ஐவிட குறைவாகும் போது, மக்கள் தொகை நீண்ட காலத்தில் குறையத் தொடங்கும்.
1.9 என்றால் என்ன அர்த்தம்?
- இந்தியாவில் ஒரு பெண் சராசரியாக 1.9 குழந்தைகள் மட்டுமே பெற்றெடுக்கிறார்.
- இது 2.1-ஐவிட குறைவாக இருப்பதால், நீண்ட காலத்தில் மக்கள் தொகை குறையும்.
2025ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் மதிப்பீட்டின்படி, இந்தியாவின் மக்கள் தொகை தற்போது சுமார் 1.46 பில்லியன் (146 கோடி) ஆக உள்ளது. இது உலகில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா தொடரும் என்பதை உறுதி செய்கிறது. மகப்பேறு விகிதம் குறைந்தாலும், இளம் மக்கள் தொகை அதிகம் இருப்பதால் இன்னும் சில ஆண்டுகள் மக்கள் தொகை வளர்ச்சி தொடரும்.
தற்போதைய நிலையில், இந்திய மக்களின் 24% பேர் 0-14 வயது குழுவில், 68% பேர் வேலை செய்யும் வயதான 15-64 வயது குழுவில் உள்ளனர். முதியோர் (65 வயது மேல்) மக்கள் தொகை தற்போது 7% ஆகவும், எதிர்காலத்தில் இது அதிகரிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை 1.7 பில்லியன் வரை அதிகரித்து, அதன் பிறகு குறையத் தொடங்கும் என ஐ.நா. அறிக்கைகள் தெரிவிக்கின்றன
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications