மெரினாவை தொடர்ந்து தாம்பரம் விமானப்படை தளத்தில் சாகச நிகழ்வு.. தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த தளபதி!
சென்னை: இந்திய விமானப்படையின் 92து ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் விமானங்களின் சாகச நிகழ்வு மற்றும் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்று வருகிறது.
இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் விமானப் படை சாகச நிகழ்ச்சி நேற்று முன்தினம் (அக்டோபர் 6) நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியைப் பார்வையிட லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் சென்னை மெரினா கடற்கரையில் திரண்டனர்.

இதனால் மெரினா கடற்கரை சுற்றுவட்டாரத்தில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே, விமான சாகச நிகழ்வைப் பார்க்க நீண்ட நேரம் வெயிலில் நின்றதாலும், நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டதாலும் நூற்றுக்கணக்கானோர் மயக்கமடைந்தனர். அவர்களில் 5 பேர் உயிரிழந்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்திய விமானப்படையின் 92து ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் விமானங்களின் சாகச நிகழ்வு மற்றும் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்வு இன்று நடைபெற்று வருகிறது.
தாம்பரம் விமானப்படை தளத்தில் விமானப்படை வீரர்கள், பல்வேறு சாகச நிகழ்வுகளை அரங்கேற்றியுள்ளனர். சென்னை மெரினாவில் நடைபெற்றது போலவே பல்வேறு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் வானில் சாகசங்கள் செய்தன. மேலும், விமானப்படை வீரர்கள் மிடுக்கான அணிவகுப்பு நடத்தினர்.
மெரினா கடற்கரையில் நடந்த விமான சாகச நிகழ்வுக்கு சிறப்பான ஒத்துழைப்பு அளித்த தமிழ்நாடு அரசு, சென்னை நிர்வாகத்திற்கு நன்றி என 92வது விமானப்படை தினத்தை முன்னிட்டு தாம்பரம் விமானப்படை தளத்தில் நடந்த நிகழ்ச்சியில் விமானப்படை தளபதி அமர் ப்ரீத் சிங் பேசியுள்ளார்.
-
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது!












Click it and Unblock the Notifications