Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் பிரிந்த உயிர்.. நெஞ்சுவலியால் இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குநர் ராகேஷ் பால் மரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் ராகேஷ் பால் நெஞ்சுவலியால் சென்னையில் இன்று மரணமடைந்தார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் காலமானார்.

தமிழக முன்னாள் முதல்வரும், திமுகவின் மாஜி தலைவருமான மறைந்த கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது நினைவை போற்றும் வகையில் 100 ரூபாய் நினைவு நாணயம் இன்று வெளியிடப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 100 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட்டார். அதனை முதல்வர் ஸ்டாலின் பெற்று கொண்டார்.

rakesh pal indian coast guard

முன்னதாக சென்னையில் கடலோர காவல்படையின் கடல்சார் மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தின் புதிய கட்டடத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று திறந்து வைத்தார். இந்த விழாவை ஒருங்கிணைக்கும் பணிக்காக இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் ராகேஷ் பால் சென்னை வந்திருந்தார்.

இந்நிலையில் தான் இன்று மதியம் சுமார் 2 மணியளவில் இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் ராகேஷ் பாலுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் பரிசோதனைகள் செய்யப்பட்டனர். மேலும் ஆஞ்சியோ பரிசோதனை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இத்தகைய சூழலில் தான் திடீரென்று இன்று மாலையில் ராகேஷ் பால் இறந்தார்.

மரணமடைந்த ராகேஷ் பால் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். இவர் இந்திய கடலோர காவல்படையின் (ஐசிஜி) 25 வது தலைமை இயக்குநராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். இந்திய கடற்படை அகாடமியின் முன்னாள் மாணவரான அவர், ஜனவரி 1989ல் இந்திய கடலோர காவல்படையில் சேர்ந்தார். கொச்சியில் உள்ள இந்திய கடற்படை பள்ளி துரோணாச்சார்யாவில் கன்னேரி மற்றும் ஆயுத அமைப்புகளில் தொழில்முறை நிபுணத்துவத்தையும், இங்கிலாந்தில் எலக்ட்ரோ-ஆப்டிக்ஸ் ஃபயர் கன்ட்ரோல் சொல்யூஷன் படிப்பையும் பெற்றுள்ளார்.

34 ஆண்டுகால அனுபவம் பெற்றுள்ள அவர், காந்திநகரின் கமாண்டர் கடலோர காவல்படை மண்டலம் (வடமேற்கு), துணை தலைமை இயக்குநர் (கொள்கை மற்றும் திட்டங்கள்) மற்றும் டெல்லி கடலோர காவல்படை தலைமையகத்தில் கடலோர காவல்படை கூடுதல் தலைமை இயக்குநர். இது தவிர, டெல்லியில் உள்ள கடலோரக் காவல்படை தலைமையகத்தில் இயக்குநர் (உள்கட்டமைப்பு மற்றும் பணிகள்) மற்றும் முதன்மை இயக்குநர் (நிர்வாகம்) போன்ற பல்வேறு மதிப்புமிக்க பணியாளர் பொறுப்புகளை வகித்துள்ளார்.

ஐசிஜிஎஸ் சமர்த், ஐசிஜிஎஸ் விஜித், ஐசிஜிஎஸ் சுசேதா கிருபளானி, ஐசிஜிஎஸ் அகல்யாபாய் மற்றும் ஐசிஜிஎஸ் சி -03 ஆகிய கப்பல்களில் தலைமை பொறுப்பு வகித்துள்ளார். இவரது சேவையை பாராட்டி கடந்த 2013-ம் ஆண்டு கடலோர காவல்படை பதக்கம் வழங்கப்பட்டது. முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு குடியரசுத் தலைவர் கடலோர காவல்படை பதக்கமும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+