இனி கடைசி நேரத்தில் டிக்கெட் கேன்சல் செய்தால் நோ ரீஃபண்ட்.. ரயில் டிக்கெட் ரத்து நடைமுறையில் மாற்றம்
சென்னை: ரயில் டிக்கெட்டுகளை, ரயில் புறப்படுவதற்கு முந்தைய 8 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் கட்டணம் திருப்பித் தரப்படாது என ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்வது மற்றும் அதற்கான ரீஃபண்ட் பெறுவது தொடர்பான விதிமுறைகளை இந்திய ரயில்வே மாற்றியுள்ளது. ஏப்ரல் 1 முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன.
ரயில் டிக்கெட் ரத்து நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, ரயில் டிக்கெட்டுகளை, ரயில் புறப்படுவதற்கு முந்தைய 8 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் கட்டணம் திருப்பித் தரப்படாது என ரயில்வே அறிவித்துள்ளது. 8 மணி நேரத்துக்கு முன்பாக 24 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் 50% தொகை மட்டுமே திருப்பித் தரப்படும்.

72 மணி நேரம் முதல் 24 மணி நேரத்துக்குள் ரயில் டிக்கெட் ரத்து செய்தால் ரத்து கட்டணம் தவிர, பயணக் கட்டணத்திலும் 25% பிடித்தம் செய்யப்படும். ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரம் முன்பாக ரத்து செய்தால் மட்டுமே தற்போதைய நடைமுறைப்படி முழு கட்டணம் திருப்பித் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் டிக்கெட் ரத்து கட்டணம் தொடர்பான நடைமுறைகளில் புதிய மாற்றங்கள் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில் டிக்கெட் தொடர்பான பல முக்கிய சீர்திருத்தங்களை இன்று அறிவித்துள்ளார்.
செயல்பாடுகளை மேம்படுத்துதல், டிக்கெட் வழங்குவதில் வெளிப்படைத்தன்மை மற்றும் சரக்குப் போக்குவரத்து ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்த இந்திய ரயில்வே தயாராகி வருவதாக அமைச்சர் கூறியுள்ளார். ரயில்வே நெட்வொர்க்கை நவீனமயமாக்குவதற்கும், பயணிகள் சேவைகளை மேம்படுத்துவதற்குமான திட்டத்தின் ஒரு பகுதியாக, 5 முக்கிய சீர்திருத்தங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
அதன்படி, ரயில் புறப்படும் நேரத்திற்கு 8 மணி நேரத்திற்கு முன்பு பயணச்சீட்டை ரத்து செய்தால், அவருக்கு எந்தவிதமான பணமும் திரும்பக் கிடைக்காது. 24 மணி முதல் 8 மணி நேரத்திற்குள் டிக்கெட் ரத்து செய்யப்பட்டால், 50 சதவீத தொகை மட்டுமே திரும்ப வழங்கப்படும். இந்தப் புதிய விதிகளை அமல்படுத்துவதன் மூலம் கள்ளச்சந்தையைக் கட்டுப்படுத்தவும், சாதாரண பயணிகள் எளிதாகப் பயணச் சீட்டுகளைப் பெறுவதை உறுதி செய்யவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகளின் கீழ், ரயில் பயணிகள் இனி எந்த ரயில் நிலையத்திலிருந்தும் தங்கள் பயணச் சீட்டுகளை ஆஃப்லைன் முறையில் ரத்து செய்ய முடியும். இதனால், பயணிகள் தாங்கள் டிக்கெட் முன்பதிவு செய்த நிலையத்தில் மட்டுமே கேன்சல் செய்ய முடியும் என்பது மாற்றப்பட்டுள்ளது.
ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்கள் முன்பு வரை ரயிலில் ஏறும் இடத்தை பயணிகள் மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது, பயணிகள் பட்டியல் தயாரிக்கும் வரையே ஏறும் ரயில் நிலையத்தை மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications