இனி கடைசி நேரத்தில் டிக்கெட் கேன்சல் செய்தால் நோ ரீஃபண்ட்.. ரயில் டிக்கெட் ரத்து நடைமுறையில் மாற்றம்
சென்னை: ரயில் டிக்கெட்டுகளை, ரயில் புறப்படுவதற்கு முந்தைய 8 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் கட்டணம் திருப்பித் தரப்படாது என ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்வது மற்றும் அதற்கான ரீஃபண்ட் பெறுவது தொடர்பான விதிமுறைகளை இந்திய ரயில்வே மாற்றியுள்ளது. ஏப்ரல் 1 முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன.
ரயில் டிக்கெட் ரத்து நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, ரயில் டிக்கெட்டுகளை, ரயில் புறப்படுவதற்கு முந்தைய 8 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் கட்டணம் திருப்பித் தரப்படாது என ரயில்வே அறிவித்துள்ளது. 8 மணி நேரத்துக்கு முன்பாக 24 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் 50% தொகை மட்டுமே திருப்பித் தரப்படும்.

72 மணி நேரம் முதல் 24 மணி நேரத்துக்குள் ரயில் டிக்கெட் ரத்து செய்தால் ரத்து கட்டணம் தவிர, பயணக் கட்டணத்திலும் 25% பிடித்தம் செய்யப்படும். ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரம் முன்பாக ரத்து செய்தால் மட்டுமே தற்போதைய நடைமுறைப்படி முழு கட்டணம் திருப்பித் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் டிக்கெட் ரத்து கட்டணம் தொடர்பான நடைமுறைகளில் புதிய மாற்றங்கள் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில் டிக்கெட் தொடர்பான பல முக்கிய சீர்திருத்தங்களை இன்று அறிவித்துள்ளார்.
செயல்பாடுகளை மேம்படுத்துதல், டிக்கெட் வழங்குவதில் வெளிப்படைத்தன்மை மற்றும் சரக்குப் போக்குவரத்து ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்த இந்திய ரயில்வே தயாராகி வருவதாக அமைச்சர் கூறியுள்ளார். ரயில்வே நெட்வொர்க்கை நவீனமயமாக்குவதற்கும், பயணிகள் சேவைகளை மேம்படுத்துவதற்குமான திட்டத்தின் ஒரு பகுதியாக, 5 முக்கிய சீர்திருத்தங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
அதன்படி, ரயில் புறப்படும் நேரத்திற்கு 8 மணி நேரத்திற்கு முன்பு பயணச்சீட்டை ரத்து செய்தால், அவருக்கு எந்தவிதமான பணமும் திரும்பக் கிடைக்காது. 24 மணி முதல் 8 மணி நேரத்திற்குள் டிக்கெட் ரத்து செய்யப்பட்டால், 50 சதவீத தொகை மட்டுமே திரும்ப வழங்கப்படும். இந்தப் புதிய விதிகளை அமல்படுத்துவதன் மூலம் கள்ளச்சந்தையைக் கட்டுப்படுத்தவும், சாதாரண பயணிகள் எளிதாகப் பயணச் சீட்டுகளைப் பெறுவதை உறுதி செய்யவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகளின் கீழ், ரயில் பயணிகள் இனி எந்த ரயில் நிலையத்திலிருந்தும் தங்கள் பயணச் சீட்டுகளை ஆஃப்லைன் முறையில் ரத்து செய்ய முடியும். இதனால், பயணிகள் தாங்கள் டிக்கெட் முன்பதிவு செய்த நிலையத்தில் மட்டுமே கேன்சல் செய்ய முடியும் என்பது மாற்றப்பட்டுள்ளது.
ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்கள் முன்பு வரை ரயிலில் ஏறும் இடத்தை பயணிகள் மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது, பயணிகள் பட்டியல் தயாரிக்கும் வரையே ஏறும் ரயில் நிலையத்தை மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications