Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டாடா-வை விட பின் தங்கிதான் இருக்கீங்க.. ட்ரோல் செய்தவருக்கு.. ஆனந்த் மகிந்திரா நெத்தியடி பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திராவிடம் எக்ஸ் தளத்தில், டாடா நிறுவனத்தை விட உங்கள் டிரக் நிறுவனம் பின் தங்கியே உள்ளது என நெட்டிசன் ஒருவர் கூறியிருந்தார். நெட்டிசனின் இந்த கேள்விக்கு ஆனந்த் மகிந்திரா கொடுத்த பதில் தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் மோட்டார் வாகன உற்பத்தி, ஐடி துறை என பல்வேறு துறைகளில் கோலோச்சும் நிறுவனம் மகிந்திரா. இந்த நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் ஆனந்த் மகிந்திரா. ஆனந்த் மகிந்திரா சமூக வலைத்தளங்களிலும் படு ஆக்டிவாக இருக்கக் கூடியவர். தனக்கு பிடித்தமான தகவல்கள், வியப்பூட்டும் படியான துணுக்குகள் என தான் கண்டறிந்த பல விஷயங்களை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

 Industrialists Anand Mahindra Give sharp reply to troll over behind Tata Motors in sales netizens praises

ஆனந்த் மகிந்திராவுக்கு சமூக வலைத்தளங்களில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என சொல்லும் அளவுக்கு அவரது பதிவுகள் எல்லாம் வைரல் ஹிட் அடிக்கும். நெட்டிசன்கள் கேள்விக்கு சுவாரசியமான பதில்களை அளித்து நெட்டிசன்களின் விவாதத்திற்கு தீனி போடவும் தயங்கமாட்டார். அப்படியான ஒரு நிகழ்வுதான் நேற்று நடைபெற்றது.

நெட்டிசன் எழுப்பிய கேள்வி: ஆனந்த் மகிந்திரா தனது எக்ஸ் தளத்தில், மகிந்திரா நிறுவனத்தின் டிரக் & பஸ் நிறுவனம் 14-வது ஏஜிஸ் கிரஹாம் பெல் விருது பெற்று இருப்பதாகவும் அதற்கான படத்தையும் பெருமையுடன் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவை பார்த்த நெட்டிசன் ஒருவர்.. உங்கள் நிறுவனத்தின் விற்பனை இன்னமும் டாடாவுக்கு பின்னால்தான் இருக்கிறது" எனக் கூறியிருந்தார்.

ஆனந்த் மகிந்திரா பதில்: இதை கவனித்த ஆனந்த் மகிந்திரா.. சுவாரசியமான பதில் ஒன்றை அளித்துளார். அந்த பதிவுதான் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. ஆனந்த் மகிந்திரா... விற்பனை குறைவாக உள்ளதே எனக் கூறிய நெட்டிசனின் பதிவுக்கு கொடுத்த பதிலில், "இந்திய டிரக் இண்டஸ்ட்ரீஸில் டாடா நிறுவனம் வழிகாட்டியாகவும்... தனி பாதையை உருவாக்குவதாகவும் உள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வடிவமைப்பை நான் வியப்புடன் ஒப்புக்கொள்கிறேன். டாடா நிறுவனத்துடன் இணைந்து இந்த துறையில் போட்டி போடுவதை ஒரு பெருமையாக உணர்கிறோம். நாங்கள் இதை செய்வதன் மூலம் இந்தியாவின் உற்பத்தி தரம் மற்றும் திறனை நாங்கள் மேலும் மெருகேற்றுகிறோம்" என்று பதிவிட்டுள்ளார். ஆனந்த் மகிந்திராவின் இந்த பதிவு நெட்டிசன்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

நெட்டிசன்கள் கருத்து: நெட்டிசன் ஒருவர் கூறுகையில், இந்தியராக இருப்பதே மிகவும் முக்கியம். டாடா மற்றும் மகிந்திரா ஆகிய நிறுவனங்களுமே இந்திய நிறுவனங்கள்.. எனவே ஆரோக்கியமான போட்டியை கண்டிப்பாக கொண்டாட வேண்டும். இரு நிறுவங்களுமே தங்களால் இயன்ற அளவுக்கு சிறந்ததை கொடுத்து வருகின்றன" என்று பதிவிட்டுள்ளார். அதேபோல், மற்றொரு நெட்டிசன் கூறும் போது, இந்த இரண்டு நிறுவனங்களுமே நம்மை பெருமைபடுத்தக்கூடியவை.

நேற்று கூட ஆஸ்திரேலியாவில் லேண்ட் க்ரூசர் நிறுவனத்தை விட ஸ்கார்பியோ பிக் அப் அதிக மதிப்பு மிக்கதாக உள்ள செய்தியை நான் பார்த்தேன்" என்று கூறியுள்ளார். நெட்டிசன்கள் மத்தியில் ஆனந்த் மகிந்திராவின் இந்த பதிவு பல லட்சம் பார்வையாளர்களை தாண்டி சென்று கொண்டிருக்கும் வேளையில், அவரிடம் முதன் முதலில் இந்த கேள்வியை கேட்ட நெட்டிசன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. தனது கேள்வியை டெலிட் செய்து விட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+