போராட்டங்களே வாழ்க்கை.. 48 ஆண்டு கால அரசியல் பயணம்! திருப்பூர் எம்பி தோழர் சுப்பராயன் யார்?
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (சிபிஐ) திருப்பூர், நாகை தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த 2 தொகுதிகளிலும் சிபிஐ வெற்றி பெற்றிருக்கிறது. இதில் திருப்பூர் முக்கியமான தொகுதியாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற கே.சுப்பராயன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
மற்ற கட்சிகளை போல கம்யூனிஸ்ட் கட்சிகளில், வேட்பாளர்கள் தேர்வு இருக்காது. மற்ற கட்சிகளில் தலைவர் அல்லது அதிகாரம் மிக்க நபர்தான் வேட்பாளர்களை இறுதி செய்வார். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகளில் தேர்வு குழுதான் வேட்பாளர்களை இறுதி செய்யும். சுப்பராயனும் இப்படித்தான் தேர்வு செய்யப்பட்டார்.

சுப்பராயன் 1976ம் ஆண்டு தனது 20 ஆவது வயதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானர். திருப்பூரில் கட்சியின் முழுநேர ஊழியராக செயல்பட்டு வருகிற இவர் பனியன் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கத்திலும் ஏஐடியூசி அமைப்பின் பல தொழிற்சங்கங்களுக்கும் பொறுப்பு வகித்தவர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் மாநிலக்குழு உறுப்பினர், கோவை மாவட்டச் செயலாளர், மாநில நிர்வாகக்குழு, செயற்குழு, தேசியக்குழு, தேசிய நிர்வாகக்குழு ஆகியவற்றின் உறுப்பினராகவும், மாநில துணைச் செயலாளர் ஆகிய பொறுப்புகளிலும் செயல்பட்டிருக்கிறார். அதே போல் ஏஐடியூசி தொழிற்சங்க அமைப்பில் தமிழ்நாடு மாநில தலைவர், தேசிய துணைத் தலைவர் ஆகிய பொறுப்புகளில் செயல்பட்டவர்.
அதேபோல 1985ம் ஆண்டு முதல் 1988ம் ஆண்டு வரையும், 1996 முதல் 2001 வரையும் ஒன்றுபட்டு திருப்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டவர். கடந்த 2004 முதல் 2009 வரை கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும், செயல்பட்டவர். தற்போது 2019 முதல் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இரண்டாவது முறையாக இதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் 4,72,739 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளரை வீழ்த்தியுள்ளார்.
திருப்பூர் என்பது லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நிரம்பிய ஒரு துடிப்பான தொழில் மாவட்டமாகும். இங்கு தமிழர்கள் மட்டுமல்லாது, வட மாநிலங்களை சேர்ந்தவர்களும் கணிசமான அளவில் பணி செய்கின்றனர். இருப்பினும் தொழிற்சாலைகளில் இன்னமும் உழைப்பு சுரண்டல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே இதற்கு எதிராக தொழிலாளர்களை ஒருங்கிணைக்க சரியான தலைமை தேவைப்பட்டது என்றும், அந்த தலைமைதான் சுப்பராயன் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications