மசோதாக்களை பரிசீலிப்பதை விட ஆளுநர் ரவிக்கு அப்படி என்ன வேலை இருக்கு? -இனிகோ இருதயராஜ்
சென்னை: தமிழக சட்டசபையில் இயற்றப்பட்ட சட்ட மசோதாக்களை பரிசீலிப்பதை விட ஆளுநருக்கு அப்படி என்ன தான் வேலை உள்ளதோ தெரியவில்லை என கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் சாடியுள்ளார்.
ஆளுநரிடம் இருந்து அதிகார ஆக்கிரமிப்பை மீட்டே தீருவோம் என்றும் கூறியிருக்கிறார். ஆளுநர் மீது குற்றஞ்சாட்டி இனிகோ கூறியதாவது; ''தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் தராமல் இருப்பதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஆளுநர் ரவி ஒரு விபரீத அரசியல் ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறார் என்பதை சொல்லாமல் சொல்லி இருந்தது.''

''அரசியல் சாசனத்தின் 200வது பிரிவின்படி ஒரு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டால் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது நிராகரிக்க வேண்டும் அல்லது குடியரசுத் தலைவருக்கு மறுபரிசீலனைக்காக அனுப்ப வேண்டும் என்று சொல்லி உள்ளது நீதிமன்றம். ஆனால் இதில் எதையுமே செய்யாமல் சட்டப்பேரவையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல், இப்போது உச்ச நீதிமன்றம் குட்டு வைத்தவுடன் 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பி இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ''
"ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருந்தால் அது செத்துவிட்டது என்று அர்த்தம்" என்று சொன்ன ஆளுநர் ரவிக்கு இப்போது உச்சநீதிமன்றம் குட்டு வைத்தவுடன் பதற்றம் அதிகரித்திருக்கிறது போலும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள சில அதிகாரங்களைத் தவிர மாநில அரசின் தேர்வு செய்யப்பட்ட அமைச்சரவையின் ஆலோசனைப்படி தான் ஆளுநர் செயல்பட வேண்டும் என்று இப்போது உச்ச நீதிமன்றம் கூறியவுடன் பதற்றம் தாளாமல் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியிருக்கிறார் ஆளுநர் ரவி.''

''அரசியல் சட்டத்தின் மாண்பை மதிக்க வேண்டும் ஆளுநர் ரவி. மசோதாக்களை பரிசீலிப்பதைவிட அவருக்கு அப்படி என்ன வேலை என்று தான் தெரியவில்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு எதிராகச் செயல்படும் ரவி அவர்களின் இந்த செயல் அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்.''
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications