Women's Day: போராட்டம், இன்னல்களை தாண்டி தடைக்கற்களை படிக்கற்களாய் மாற்றும் பெண்களை போற்றுவோம்!
சென்னை: பெண்மையை போற்றுவோம். மாதராய் பிறப்பதற்கே நல்ல மா தவம் செய்திட வேண்டுமம்மா என்ற கூற்றிற்கு ஏற்ப பெண்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் மார்ச் 8-ஆம் தேதி பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆணுக்கு பெண் சமம் என்பதற்கேற்ப இன்றைய காலகட்டங்களில் பெண்கள் இல்லாத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு முன்னேறி வருகின்றனர்.
பாரதி கண்ட புதுமைப் பெண்களாக உலா வரும் நிலையில் பாலின சமத்துவம் என்பது அடிப்படை உரிமை மட்டும் கிடையாது. அது சமூகநீதி என்பதை பல பெண்கள் இன்று மெய்பித்து காட்டியுள்ளனர். ஆண்களை விட பெண்களே அதிக அளவு மன உறுதி கொண்டவர்கள்.

அனைத்து நிலைகள்
அதனால்தான் ஒரு கருவை 10 மாதங்கள் சுமந்து பெற்றெடுக்கும் பாக்கியம் பெண்களுக்கு கிடைத்துள்ளது. பெண்கள் தோல்விகளை கண்டு மன துவண்டு போவதில்லை. 10 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தாலும் அடுத்த முறை 15 அடி உயரத்துக்கு செல்லும் அளவிற்கு பெண்களின் விடா முயற்சி இருக்கும். தாயாக, மனைவியாக, தங்கையாக, அக்காளாக, மகளாக இன்று நம் உறவின் அனைத்து நிலைகளிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள்.

பெண்களுக்கு நிகர்
பெண்கள் தினம் சர்வதேச மகளிர் தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது மார்ச் 18, 1911 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து 1913-ஆம் ஆண்டு முதல் மார்ச் 8 ஆம் சர்வதேச மகளிர் தினமாக அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. தியாகம், பரிவு, பாசம், அன்பு, பொறுமை காட்டுவதில் பெண்களுக்கு நிகர் பெண்களே.

கோலோச்சும் பெண்கள்
அரசியல், அறிவியல், கல்வி, விஞ்ஞானம், விண்வெளி, விளையாட்டு, நாடாளுமன்றம், சட்டமன்றம், ராணுவம், கடற்படை, விமான படை என பெண்கள் பல்வேறு நிலைகளில் உயர்ந்து காணப்படுகின்றனர். அதில் சாதனை செய்து வெற்றியும் பெற்று வருகின்றனர். ஆண்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படும் எல்லை பாதுகாப்பு பணிகளிலும் பெண்கள் கோலோச்சி வருகின்றனர்.

உருத்தெரியாமல்
ஒரு பெண் நினைத்தால் ஒரு குடும்பம் முன்னேற்றத்தை அடைவதும், உருத்தெரியாமல் போவதும் சாத்தியம். மாநில அரசுகளால் மூடுவதற்கு பரிந்துரை செய்யப்பட்ட அரசுப் பள்ளிகளில் தன் சொந்த செலவில் முன்னேற்றங்களை கொண்டு வந்து தனியார் பள்ளிக்கேற்ப அரசு பள்ளிகளின் தரத்தை தனது விடாமுயற்சியால் மாற்றிடும் பெண் ஆசிரியர்களை என்னவென சொல்வது? பெண்கள் தினம் தொடங்கி 106 ஆண்டுகள் முடிந்து விட்டது என கூறினாலும் ஒரு பக்கம் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
Recommended Video

நம்புவோம்
பெண்களை விட ஆண்களுக்கு வலிமையை கொடுத்ததே அவர்கள் ஆபத்திலிருக்கும் போது உதவுவதற்குத்தான். ஆனால் அதை தவறாக பயன்படுத்தும் ஆண்களுக்கு மத்தியில் போராட்டமே வாழ்க்கையாகி ஒவ்வொரு நொடியும் பல்வேறு இன்னல்களை தாண்டி தடைகற்களை படிக்கற்களாய் மாற்றும் பெண்களை போற்றுவோம். இனி வரும் ஆண்டுகளில் பெண்கள் மீதான பாலியல் வக்கிரங்கள் குறையும் என நம்புவோமாக!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications