அதிமுகவில் 8,000 பேருக்கு ஒரே நாளில் நேர்காணல்... ஜனநாயகம் படும்பாடு இருக்கே-கூட்டணி சகவாசம் அப்படி!
சென்னை: அகில உலக வரலாற்றிலேயே தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த 8,000 பேருக்கு ஒரே நாளில் நேர்காணல் நடத்தி மெகா கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது அதிமுக. ஜனநாயகத்தின் அத்தனை விழுமியங்களும் ஆடிக்காற்றில் அம்மி பறப்பது போல அதிமுகவிடம் பறந்து கொண்டிருக்கிறது.
Recommended Video

ஜனநாயக மாண்புகளை காப்பாற்றுவதற்காக சர்வாதிகாரத்தனமாக இல்லாமல் இருக்கத்தான் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்கள் கட்டணத்துடன் பெறப்படுகின்றன. கட்டணமாவது கட்சி நிதிக்கு போய்விடும் பிரச்சனை இல்லை.

விருப்ப மனு நேர்காணல்
இப்படி விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடத்துவதும் ஜனநாயகத்தின் இன்னொரு பிரதான அம்சம். தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர் கட்சிக்காக எத்தனை ஆண்டுகாலம் பாடுபட்டார்? என்ன பணிகள் செய்தார்? அவரது பின்னணி என்ன? கட்சி போராட்டங்களில் பங்கேற்றாரா? என்பதை எல்லாம் வேட்பாளர் நேர்காணல் குழு ஆய்வு செய்யும். அதற்குதான் இந்த நேர்காணல்.

சம்பிரதாய நேர்காணல்கள்
கட்சிகளைப் பொறுத்தவரையில் இந்த ஜனநாயக மரபுகள் சம்பிராதமாயாகத்தான் கடைபிடிக்கப்படுகின்றன. அதில் எந்த கட்சியும் விதிவிலக்கு அல்ல. இருந்த போதும் இந்த சம்பிரதாய நேர்காணல்கள் கூட சர்ச்சைக்குரியதாக இருக்கக் கூடாது என்பதே ஜனநாயக ஆர்வலர்களின் எண்ணம்.

8000 பேருக்கு நேர்காணல்
அதிமுக இப்போது செய்து கொண்டிருப்பது இந்த மரபுகளை சீர்குலைக்கும் செயல் என்பதுதான் இவர்களின் ஆதங்கம். ஒரே நாளில் 8000க்கும் அதிகமானோருக்கு நேர்காணல் என்பது அப்பட்டமான கண்துடைப்பு என்பது எல்லோருக்கும் தெரியும். ஒருநபருக்கு ஒரு நிமிடம் கூட ஒதுக்க முடியாமல் கூட்டமாக வைத்து நேர்காணல் என்பதெல்லாம் ஜனநாயகத்தில் பெருங்கூத்து என்றுதான் சொல்லலாம்.

பாஜக சகவாசம்
அதுசரி அதிமுக இப்போது கூட்டணி சேர்ந்திருப்பது எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியை கவிழ்க்கும் கலையில் கைதேர்ந்த ஜனநாயக மாண்பு கொண்ட பாஜக அல்லவா. சேராத இடந்தன்னில் சேர்ந்தால் இப்படித்தான் அதிமுகவும் சிந்திக்கும்.. என்ன செய்ய? விதி வலியது.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications