40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன
சென்னை: 40 ஆயிரம் கோடி முதலீட்டில் தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டம் மிக விரைவில் தொடங்கப்படுவது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்கொரிய அதிகாரிகளுடன் தான் நடத்திய இந்த முக்கிய ஆலோசனை மற்றும் பேச்சுவார்த்தை தொடர்பான போட்டோக்களை அமைச்சர் கீர்த்தனா தனது சோஷியல் மீடியா பக்கத்தில் இன்று ஷேர் செய்துள்ளார். ஆனால் திமுக எம்பி கனிமொழி இதுகுறித்து சொல்வதென்ன? தவெக அரசின் திட்டங்கள் குறித்து கனிமொழி விமர்சித்துள்ளது என்ன? இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக ஆட்சியை பிடித்த பிறகு, அரசியல் களம் ஒரே பரபரப்பும், சலசலப்புமாக காணப்படுகிறது.. அதுவும் முந்தைய திமுக அரசின் திட்டங்கள் மற்றும் இப்போதைய தொழில் முதலீடுகள் தொடர்பாக திமுக மற்றும் தவெக இடையே நேரடி வார்த்தைப்போர் தொடங்கியுள்ளது.

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தொழிற்சாலை திட்டம்
குறிப்பாக, தூத்துக்குடியில் அமையவிருந்த கப்பல் கட்டும் தொழிற்சாலை திட்டம் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எழுப்பியுள்ள விமர்சனமும், அதற்கு தவெக அரசின் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கையும், தற்போது அரசியல் மற்றும் தொழில் வட்டாரங்களில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
திமுக எம்பி கனிமொழி நேற்றைய தினம் தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த திட்டங்களை, "சிங்கப்பெண் படை" என்ற பெயரில் தவெகவினர் "காப்பி பேஸ்ட்" செய்து, தங்களின் புதிய திட்டம் போல "ஸ்டிக்கர்" ஒட்டி விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள் என்று சாடியுள்ளார்.
தவெக அரசு - கனிமொழி
தவெக அரசுக்கு தமிழகத்தில் என்னென்ன திட்டங்கள் அமலில் இருக்கின்றன என்ற அடிப்படை விவரம் கூடத் தெரியவில்லை என்றும், முந்தைய திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களைத்தான் அவர்கள் தங்கள் கணக்கில் காட்டிக் கொள்கிறார்கள் என்றும் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்துப் பேசிய கனிமொழி, தமிழகத்தில் முதன்முதலாக மகளிரைக் காவல்துறைக்குக் கொண்டு வந்தது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் என்பதை சுட்டிக்காட்டினார். அதேபோல், மகளிர் பாதுகாப்புக்காகத் தனிப் பிரிவையே உருவாக்கியவர் முந்தைய முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
கனிமொழி காரசார விமர்சனம்
இப்படிப்பட்ட சூழலில், பெண் காவலர்களுக்கு இன்று புதிதாக ஒரு சீருடையை மட்டும் மாற்றிக் கொடுத்துவிட்டு, அதை ஏதோ ஒரு புதிய திட்டம் போலக் காட்டுவது எந்த வகையில் நியாயம் என்றும், வெறும் சீருடை மாற்றத்தால் அது புதிய திட்டமாக மாறிவிடுமா என்றும் கனிமொழி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தவெக ஆட்சியில் தமிழகத்திற்கு வரவேண்டிய முக்கிய தொழில் முதலீடுகள் அனைத்தும் பிற மாநிலங்களுக்குத் திசைமாறிச் சென்று கொண்டிருப்பதாக கவலை தெரிவித்துள்ள கனிமொழி, தனது நாடாளுமன்றத் தொகுதியான தூத்துக்குடியில் ஒரு பிரம்மாண்ட கப்பல் கட்டும் தொழிற்சாலை அமைப்பதற்காக முந்தைய திமுக ஆட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது, ஆனால் தற்போதைய ஆட்சியில் அந்தத் திட்டம் கைவிடப்பட்டு, இப்போது இல்லாமல் போய்விட்டது, இதுதான் நீங்கள் பேசும் மாற்றமா?" என்று தவெக அரசை நோக்கி கனிமொழி எம்பி மிக காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர் கீர்த்தனா
கனிமொழியின் இந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவும், தூத்துக்குடி திட்டத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் தவெக அரசின் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் தவெக ஆட்சியமைந்த பிறகு, தொழில்துறை அமைச்சராக 29 வயதேயான இளம் பெண் கீர்த்தனா பொறுப்பேற்றுக்கொண்டார். மிக இளம் வயதில் இவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்ற இவர் எவ்வாறு செயல்படப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும், சந்தேகக் கேள்விகளும் ஆரம்பத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களிடையே பரவலாகக் காணப்பட்டது.
புதிய தொழில் முதலீடு
ஆனால், அந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், ஏற்கனவே திட்டமிட்ட முதலீடுகளைத் தக்கவைக்கவும் அமைச்சர் கீர்த்தனா பல்வேறு தீவிர நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக முந்தைய திமுக ஆட்சியில் ஒப்பந்தம் செய்திருந்த தென்கொரிய நிறுவனத்திற்கு அவர் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆட்சி மாற்றத்தால் இந்த முதலீடு கைநழுவி போய்விட கூடாது என்பதிலும், அந்த முதலீட்டை மீண்டும் ஒருமுறை உறுதி செய்ய வேண்டும் என்பதிலும் அமைச்சர் கீர்த்தனா உறுதியாக இருந்தார்.
இதற்காக உலகின் மிக விசித்திரமான மற்றும் மிகப்பெரிய கப்பல் கட்டும் நிறுவனமாக உலகளவில் அறியப்படும் தென்கொரியாவின் "ஹெச்டி ஹூண்டாய்" (HD Hyundai) நிறுவனத்திற்குத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா நேரில் பயணம் மேற்கொண்டார்.
40000 கோடி முதலீடு
அங்குள்ள அந்த நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்து, தூத்துக்குடி திட்டம் குறித்து மிக விரிவாகவும் நேர்மறையாகவும் கலந்துரையாடினார். அப்போது, "தமிழகத்தில் ஆட்சி மாறினாலும், உங்கள் தொழில் முதலீட்டுக்குத் தேவையான அனைத்து அரசு உதவிகளும், பாதுகாப்பும் எவ்விதத் தொய்வுமின்றி முழுமையாக செய்து தரப்படும்" என்று அந்த தென்கொரிய நிறுவன அதிகாரிகளுக்கு அமைச்சர் கீர்த்தனா மிக உறுதியான நம்பிக்கையை அளித்தார்.
அமைச்சரின் இந்த அதிரடி மற்றும் நேர்மறையான பேச்சுவார்த்தையின் காரணமாக, தூத்துக்குடியில் சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் பிரம்மாண்ட மதிப்பில் அமையவிருந்த கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டம் மிக விரைவில் தொடங்கப்படுவது இப்போது முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆரோக்கியமான அரசியல் போட்டி
தென்கொரிய அதிகாரிகளுடன் தான் நடத்திய இந்த முக்கிய ஆலோசனை மற்றும் பேச்சுவார்த்தை தொடர்பான போட்டோக்களை அமைச்சர் கீர்த்தனா தனது சோஷியல் மீடியா பக்கத்திலும் இன்று ஷேர் செய்துள்ளார்.. கனிமொழி எம்பியின் குற்றச்சாட்டுக்கு நடுவே, கைவிடப்படும் என்று கருதப்பட்ட 40 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்தை நேரில் சென்று அமைச்சர் கீர்த்தனா உறுதி செய்துள்ள இந்தச் செயலுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இப்படி, கப்பல் விவகாரத்தில் இரு தரப்பும் தங்களின் வாதங்களையும் செயல்பாடுகளையும் தீவிரமாக முன்வைத்து வருகின்றன. இந்த ஆரோக்கியமான அரசியல் போட்டி, தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு சாதகமான சூழலை உருவாக்கும் என அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
பாஸ் ஆயிட்டாரா CM விஜய்? 1 மாத கால தவெக ஆட்சி எப்படி இருக்கு? 30 நாளில் திணறடித்த 4 அமைச்சர்கள் -
டெல்லியில் விஜய்.. நாளை பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.. என்ன மேட்டர்? -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை!












Click it and Unblock the Notifications