Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உடைந்து.. கண்ணீர்விட்ட தோனி.. அன்று அழுதது ஏன்? சிஎஸ்கே புள்ளி வெளியிட்ட பரபரப்பு பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கண்ணீர் விட்ட சம்பவம் ஒன்றை பற்றிய சுவாரசிய தகவல்களை பேட்டிங் கோச் மைக் ஹஸ்ஸி பகிர்ந்து உள்ளார்.

4 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி 2022 ஐபிஎல் தொடரில் அவ்வளவு சிறப்பாக ஆடவில்லை. வரிசையாக பல்வேறு போட்டிகளில் தோல்வி அடைந்த சிஎஸ்கே அணி ப்ளே ஆப் செல்வதே சந்தேகம் ஆகியுள்ளது.

இதுவரை 10 போட்டிகளில் ஆடி வெறும் 3 போட்டிகளில் மட்டுமே சிஎஸ்கே வென்றுள்ளது. 4 முறை சாம்பியன் ஆன அணி இப்படி மோசமாக சொதப்புவது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

கேப்டன்

கேப்டன்

இந்த தொடரில் முதலில் கேப்டனாக 8 போட்டிகளில் ஜடேஜா இருந்தார். தற்போது கடந்த இரண்டு போட்டிகளாக மீண்டும் கேப்டனாக தோனி செயல்பட்டு வருகிறார். கேப்டனாக தோனி பொறுப்பேற்ற பின் இரண்டு போட்டிகளில் ஒன்றில் சிஎஸ்கே அணி வென்றது. கடந்த போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது,

ஹஸ்ஸி

ஹஸ்ஸி

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் கோச் மைக் ஹஸ்ஸி, கேப்டன் தோனி குறித்த ரகசியம் ஒன்றை பகிர்ந்துள்ளார். சிஎஸ்கே நிர்வாகம் சார்பாக ஹஸ்ஸி பேசும் அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், கேப்டன் தோனி எப்போதும் முகத்தில் ரியாக்சன் காட்ட மாட்டார். ஆனால் 2018 சீசனுக்கு முன்பாக அவர் உணர்ச்சிவசப்பட்டார். நாங்கள் இரண்டு வருடமாக சிஎஸ்கேவிற்காக ஆட முடியவில்லை.

தோனி கண்ணீர்

தோனி கண்ணீர்

நாங்கள் திரும்பி வந்தோம். மீண்டும் சிஎஸ்கே அணி ஆட தொடங்கியது 2018ல். அப்போது அணிக்கு மீண்டும் தோனி வந்ததும்.. அவர் சீசனுக்கு முன்பாக எமோஷனலாக பேசினார். அவர் உடைந்து அழுதார்.. அவர் ஒரு நொடியில் எங்கள் முன்னிலையில் கண்ணீர்விட்டார். அவர் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. எனக்கு இன்னமும் அந்த நாள் நினைவு இருக்கிறது. சிஎஸ்கே அணி எப்போதும் ஸ்பெஷல்தான்.

Recommended Video

    Dhoniயின் Epic Reply: Playoff போகலனா உலகம் அழிஞ்சிராது | CSK vs DC | OneIndia Tamil
     தோனி எமோஷன்

    தோனி எமோஷன்

    அதனால்தான் எமோஷனலை காட்டாத தோனியே கூட அன்று கண்ணீர்விட்டார். இந்த அணியில் எதோ ஸ்பெஷலாக இருக்கிறது என்று ஹஸ்ஸி குறிப்பிட்டார். பொதுவாக தோனி பொதுவில் ரியாக்சனை காட்ட மாட்டார் என்றாலும் அன்று அவர் உணர்ச்சிவசப்பட்டது வைரலானது. இந்த வருஷம் 2022 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி சொதப்பி வருகிறது. இந்த நிலையில்தான் சிஎஸ்கே அணி எப்போதும் ஸ்பெஷல் அணி என்று ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+