Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லா SP-க்களும் சென்னை நோக்கி.. தலைநகரில் 8 பேருக்கு புதுபொறுப்பு! வெயிட்டிங் லிஸ்ட்க்கு குட்பை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் எஸ்பி அந்தஸ்தில் காத்திருப்பு பட்டியலில் இருந்த 8 எஸ்பிக்களுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சென்னையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

ips-transfer-8-sps-who-are-they-in-waiting-list-now-gets-posting-in-chennai

* விருதுநகர் மாவட்ட எஸ்பியாக பணியாற்றி காத்திருப்பு பட்டியலில் உள்ள கண்ணன், சென்னை நகர காவல் நலன் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* நாகப்பட்டினம் எஸ்பியாக பணியாற்றி காத்திருப்பு பட்டியலில் உள்ள பாலகிருஷ்ணன், சென்னை தலைமையக துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* கரூர் எஸ்பியாக பணியாற்றி காத்திருப்பு பட்டியலில் உள்ள ஜோஷ் தங்கையா, சென்னை பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* ஈரோடு எஸ்பியாக பணியாற்றி காத்திருப்பு பட்டியலுக்கு சென்ற சுஜாதா சென்னை தலைமையக பயங்கரவாத ஒழிப்பு பிரிவின் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* எஸ்பி அந்தஸ்தில் பொறுப்புக்கு காத்திருந்த சண்முகம், சென்னை சிஐடி 'க்யூ' பிரிவின் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* காத்திருப்பு பட்டியலில் இருக்கும் ராஜாராஜ், சென்னை தெற்கு மண்டல லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவின் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* காத்திருப்பு பட்டியலில் இருக்கும் மாதவன், சென்னை சிஐடி கிரைம் பிரிவின் எஸ்பியாக செயல்பட உள்ளார்.

* காத்திருப்பு பட்டியலில் இருக்கும் அனிதா, சென்னையில் நவீனமயமாக்கல் பிரிவின் எஸ்பி உதவி இன்பெக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+