Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையை அதிரவைத்த இரானி கொள்ளையன் சல்மானை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு! 19 வழக்குகள் பெண்டிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இரானி கொள்ளையன் சல்மான், நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சல்மானை ஏப்ரல் 9 வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் நேற்று முன்தினம் 7 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 இரானி கொள்ளையர்களை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஜாஃபர் குலாம் என்பவர் நேற்று என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு கொள்ளையன் விசாரணை முடிந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Irani Robber Salman Remanded in Custody Until April 9 for Chain Snatching Cases in Chennai

சென்​னை​யில் நேற்று முன்​தினம் காலை 6 மணி முதல் 7.10 மணிக்​குள் சைதாப்​பேட்​டை, சாஸ்​திரி நகர், திரு​வான்​மியூர், கிண்​டி, வேளச்​சேரி​யில் மொத்​தம் 6 இடங்​களில் 6 மூதாட்​டிகளிடம் அடுத்​தடுத்து செயின் பறிக்கப்​பட்​டது. திரு​வான்​மியூரில் செயின் பறிப்​பின்​போது படு​காயம் அடைந்த மூதாட்​டி, மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார். இந்தச் சம்பவங்கள் தலைநகரை பதற வைத்தன.

இதையடுத்​து, செயின் பறிப்பு கொள்​ளை​யர்​களை பிடிக்க உடனடி​யாக தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டன. வழிப்பறியில் ஈடுபட்டது வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், திருடிய நகைகளை எடுத்துக்கொண்டு அவர்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் ஏறித் தப்பிக்க முயன்றதும் தெரியவந்தது. கொள்ளையர்கள் விமான நிலையம் நோக்கிச் சென்றது சிசிடிவி காட்சிகள் வாயிலாக கண்டறியப்பட்டு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அலர்ட் செய்யப்பட்டது.

அதன்படியே, சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்லும் விமானத்தில் தப்ப முயன்ற உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஜாபர் உசேன் இரானி (32), மிசம்சா மேசம் இரானி (20) ஆகியோரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். சென்னை சென்ட்​ரலில் இருந்து ரயில் மூலம் விஜயவாடாவுக்கு பினாகினி எக்ஸ்பிரஸ் ரயிலில் தப்ப முயன்ற சல்​மான் உசேன் இரானி (32) போலீசாரால் ஆந்திர மாநிலம் ஓங்கோலில் சுற்றிவளைத்து கைது செய்யப்​பட்டார்.

விமானத்தில் வைத்து கைது செய்யப்பட்ட கொள்ளையன் ஜாபர் குலாம் உசேன் இரானி, விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட கொள்ளையன் மேஷம் இரானி ஆகியோர் உ.பி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ரயிலில் பிடிபட்ட கொள்ளையன் சல்மான் உசேன் இரானி கர்நாடக மாநிலம் விகார் பகுதியைச் சேர்ந்தவர். மூவரும் இரானி கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்தது.

கொள்ளையர்கள் பறித்த நகைகள், செயின் பறிப்​புக்கு பயன்​படுத்​திய இருசக்கர வாக​னம் ஆகிய​வற்றை மீட்​ப​தற்​காக 3 பேரை​யும் திரு​வான்மியூர் காவல் நிலைய ஆய்​வாளர் புகாரி தலை​மையி​லான தனிப்​படை போலீ​சார் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் தரமணி பகு​திக்கு அழைத்​துச் சென்​றனர். அப்​போது, ஜாபர் தங்​களது இருசக்கர வாக​னத்​தில் ஏற்​கெனவே மறைத்து வைத்​திருந்த நாட்டு துப்​பாக்​கியை எடுத்து போலீ​சாரை நோக்கி 2 முறை சுட்​டார். இதையடுத்​து, போலீ​சார் தற்​காப்​புக்​காக சுட்​ட​தில் நெஞ்​சில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்​திலேயே ஜாபர் உயி​ரிழந்​தார்.

இந்நிலையில், சென்னையில் ஒரே நாளில் அடுத்தடுத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கொள்ளையன் சல்மான், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இரானி கொள்ளையன் சல்மானுக்கு ஏப்ரல் 9 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. சல்மான் மீது 19 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+