Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“டுவிஸ்ட்”.. அண்ணாமலை வீசிய கல்! சல்லி சல்லியா நொறுங்கிய அதிமுக உறவு - “மாஸ்டர் மைண்ட்” அமித்ஷாவா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவினரை கொந்தளிக்க வைக்கும் அளவுக்கு அண்ணாமலை பேசியதற்கான 2 விசயங்கள் காரணமாக இருக்கலாம் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்பி லட்சுமணன் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய அவர், "அதிமுகவோடு கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று உள் அரங்கில் பேசிய அண்ணாமலை, அதற்கு அடுத்த சில நாட்களிலேயே அமித்ஷா அதிமுக கூட்டணி தொடர்கிறது என்று சொன்னபோது அந்த வாதத்தை மறந்தார்.

 Is Amit shah is the master mind behind the speech of Annamalai against Jayalalitha?

அதன் பிறகு ஒரு மாதம் கழித்து டெல்லிக்கு எடப்பாடி, அண்ணாமலையை அழைத்து சமாதானம் பேசும்போது அமைதியாக இருந்த அண்ணாமலை, அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது என்று சொன்னபோதுகூட மவுனமாக இருந்த அண்ணாமலை இன்று இழுத்து வைத்து ஜெயலலிதாவை விமர்சித்து இருக்கிறார்.

இது மிக கடுமையாக விமர்சனம். அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு உணர்வுள்ள அதிமுக தொண்டரை சீண்டுவது கூட்டணி தர்மமும் அல்ல. 2 கட்சிக்கும் நல்லதும் அல்ல. நாம் இந்த கல்லை எரிந்தால் என்ன நடக்கும் என்று ஓரளவு தெரிந்துதான் அண்ணாமலை அதை எரிந்து இருக்கிறார். அதற்கு 2 காரணங்கள் இருக்க முடியும்.

முதல் காரணம்: தமிழ்நாடு பாஜகவில் இருந்து அண்ணாமலை மிக விரைவாக நீக்கப்படலாம். அது அண்ணாமலைக்கு முன்கூட்டியே சொல்லப்பட்டு இருக்கலாம். ஒரு இளம் போராளியாக ஒரு பட்டத்தோடு வெளியே போகலாம் என்று அண்ணாமலை இந்த வேலையை செய்து இருக்கலாம்.

அல்லது அதிமுக கூட்டணி உறுதி என்று நான் 2 முறை சொல்லிவிட்டேன். அமித்ஷா பாஷையில் சொல்கிறேன். அதை தொடர்வதில் எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு வேறு சில கணக்குகள் இருக்கிறது. சத்தமே இல்லாமல் அதிமுகவை கழற்றி விடலாம். இப்படி சொன்னால் அதிமுக கூட்டணி தானாகவே முறிய வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் அதை செய்யுங்கள் என்று குட்டியை விட்டு ஆழம் பார்த்து இருக்கலாம். இது எனது யூகம்தான். அர்த்தம் உள்ள யூகம்." என்று தெரிவித்து உள்ளார்.

கடந்த 2 நாட்களுக்கு முன் தனியார் ஆங்கில நாளிதழுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில், "தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளும் ஊழல் செய்து உள்ளன. மக்களின் பணத்தை வைத்து முறைகேடில் ஈடுபட்ட அனைத்து கட்சிகளையும் நான் குறிப்பிடுகிறேன். இது அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும்.

தமிழ்நாட்டில் நடந்த அனைத்துமே ஊழல் ஆட்சிதான். முன்னாள் முதலமைச்சரே ஊழல் செய்ததால் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்." என்று பேசி இருந்தார். சொத்துக்குவிப்பு வழக்கை சுட்டிக்காட்டி ஜெயலலிதாவையே அண்ணாமலை விமர்சிப்பதாக கூறி அதிமுகவினர் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

நேற்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலையை கடுமையாக கண்டித்த நிலையில், இன்று முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், செல்லூர் ராஜு உள்ளிட்டோரும் எச்சரித்து இருந்தனர். அதேபோல் ஓ பன்னீர்செல்வமும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

புதுச்சேரியில் அண்ணாமலையை கண்டித்து அதிமுகவினர் போராட்டத்திலும் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மூத்த நிர்வாகிகள் அண்ணாமலை பேச்சுக்கு எதிராக இன்று தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பாஜகவினரும் அதிமுகவினருக்கு பதிலடி கொடுத்து வருவதால் இரு தரப்பு கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+