எல்லாம் முடிஞ்சதா? ஆ.. சிஎஸ்கே டீமில் இப்படி சொல்றாங்களே? அப்போ தோனி? ஒரே குழப்பமா இருக்கே?
சென்னை: சிஎஸ்கே கேப்டன் தோனியின் ஓய்வு குறித்து உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அணியில் இருக்கும் சில நிர்வாகிகள் புதிய குழப்பம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளனர்.
சிஎஸ்கே கேப்டன் தோனி காரணமாக 2023 ஐபிஎல் சீசன் அதிக கவனம் பெற்றுள்ளது. எங்கே சென்றாலும்.. எல்லா மைதானங்களில் தோனிக்கு என்று ஸ்பெஷல் ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. அவரை காண ஆயிரக்கணக்கில் மக்கள் வர தொடங்கி உள்ளனர்.

தோனியின் கடைசி சீசனாக இது இருக்கும் என்பதால் அவரை காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் வர தொடங்கி உள்ளனர். இதனால் சிஎஸ்கே ஆடும் போட்டிகளில் எல்லாம் மைதானமே மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது.
இதுவரை 12 போட்டிகளில் ஆடிய சிஎஸ்கே அணி 4 போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்து உள்ளது. 7 போட்டிகளில் வென்றுள்ளது. ஒரு போட்டி முடிவில்லாமல் புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது. குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்து உள்ளது.
அதை தவிர மும்பை, பெங்களூர், கொல்கத்தா, ஹைதராபாத், புனே, டெல்லி என்று டாப் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் எல்லாம் சிஎஸ்கே எளிதாக வென்றுவிட்டது.
இனி மீதம் உள்ள 2 போட்டிகளில் 1ல் சிஎஸ்கே அணி வெல்ல வேண்டும்.
தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் அவரை வெற்றியோடு அனுப்ப வேண்டும் என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் எதிர்பார்க்கப்படுகிறது.
தோனி:இந்த நிலையில்தான் தோனியின் ஓய்வு குறித்து கலவையான தகவல்கள் வர தொடங்கி உள்ளன. தோனியும்.. எனக்கு பேர்வெல் கொடுக்கிறார்கள்.. நான் என் கெரியரின் கடைசி கால கட்டத்தில் இருக்கிறேன் என்றெல்லாம் க்ளூ கொடுக்க தொடங்கி விட்டார். அதனால் சிஎஸ்கே கேப்டன் தோனி கிட்டத்தட்ட ஓய்வு பெறுகிறார் என்பது கிரிக்கெட் உலகில் வைரல் விவாதமாக மாறிவிட்டது.
அதனால் ரசிகர்கள் அதிக அளவில் மேட்சை பார்க்க வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில்தான் சிஎஸ்கே கேப்டன் தோனி.. உங்கள் கடைசி சீசனில் உங்களுக்கு கொடுக்கப்படும் வரவேற்பை எப்படி பார்க்கிறீர்கள் நேற்று பஞ்சாப் ஆட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு வித்தியாசமாக பதில் அளித்தார்.
அதில்.. நீங்கள்தான் இது என்னுடைய கடைசி சீரிஸ் என்று முடிவு செய்துவிட்டீர்கள். நான் இல்லை என்று கூறி இருந்தார்.

இதையடுத்து பேட்டி அளித்த ரெய்னாவும்.. தோனி இந்த சீசன் கப் அடிப்பார்.. அதன்பின் அடுத்த சீசன் ஆடிவிட்டுதான் ஓய்வு பெறுவார் என்று கூறினார், மொத்தத்தில் தோனி ஆடுவாரா, ஓய்வு பெறுவாரா என்று தெரியாத குழப்பாமான சூழ்நிலை நிலவி வருகிறது.
சிஎஸ்கே கேப்டன் தோனியின் ஓய்வு குறித்து உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அணியில் இருக்கும் சில நிர்வாகிகள் புதிய குழப்பம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளனர்.
என்ன சொல்கின்றனர்?
நம்மிடம் பேசிய சிஎஸ்கே நிர்வாகி ஒருவர்.. ஓய்வு பெறுவதை பற்றி தோனியே அணி நிர்வாகத்திடம் தெரிவிக்கவில்லை. அவர் இதை பற்றி வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை, ஆனால் அவர் விரைவில் ஓய்வு பெறுவார்.
அவர் மிக விரைவில் ஓய்வு பெறுவதற்கான காலம் வந்துவிட்டது. அவர் விரைவில் ஓய்வு பெறுவார். ஆனால் அணி நிர்வாகத்திடம் அவர் இதை பற்றி சொல்லவில்லை. அணி நிர்வாகிகளும் எதுவும் அவரிடம் கேட்கவில்லை, என்று குறிப்பிட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications