ராகுல் காந்தியை இழுக்க எடப்பாடி பிளான்.. குறுக்கே புகுந்த ஸ்டாலின்.. அதிமுக செய்த "தவறு".. போச்சு
சென்னை: எடப்பாடி பழனிசாமி கூட்டணியில் செய்த தவறுகளால் ஸ்டாலினுக்கு சாதகமாக சூழல் மாறி உள்ளது. ஸ்டாலின் மீண்டும் வருவதற்கான சூழல் உள்ளது. ஒன் டூ ஒன் எதிர்ப்பு இருந்தால் மட்டுமே ஸ்டாலினை தோற்கடிக்க முடியும் என்று மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பின் மீண்டும் உட்கட்சி மோதல் வெடிப்பதற்கான அறிகுறிகள் ஏற்பட தொடங்கி உள்ளன. அந்த கட்சியில் லோக்சபா தேர்தல் முடிந்து என்ன நடக்கும் என்று மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

எடப்பாடி கூட்டணியில் செய்த தவறுகளால் ஸ்டாலினுக்கு சாதகமாக சூழல் மாறி உள்ளது. ஸ்டாலின் மீண்டும் வருவதற்கான சூழல் உள்ளது. ஒன் டூ ஒன் எதிர்ப்பு இருந்தால் மட்டுமே ஸ்டாலினை தோற்கடிக்க முடியும். ஆனால் எடப்பாடி தன்னை பெரிய தலைவராக நினைத்துக்கொண்டு கூட்டணியில் சொதப்பி விட்டார்.
அதிமுகவில் இரட்டையர்களாக எடப்பாடி - ஓ பன்னீர்செல்வம் இருந்த போதே அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. இப்போது ஓ பன்னீர்செல்வம் இல்லை. அண்ணாமலையும் இல்லை. அப்போதே 35 சதவிகிதம் மட்டுமே இவர்கள் வாக்குகள் பெற்றனர். ஆனால் இப்போது ஓ பன்னீர்செல்வமும் இல்லை. அப்படி இருக்க எடப்பாடி எப்படி வெல்ல முடியும்.
ஜெயலலிதா போன பின் சீமான் வாக்குகளை பிரித்துவிட்டார். இஸ்லாமியர்கள் வாக்குகள் போய்விட்டது. பல ஜாதி வாக்குகள் சீமானுக்கு செல்லும். இது போக முக்குலத்தோர் வாக்குகளை ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் பிரிப்பர். அப்படி இருக்க எடப்பாடி பழனிச்சாமி எப்படி வெல்ல முடியும்? அவருக்கு வெற்றி சாத்தியம் உள்ளதா? எடப்பாடி எப்படி காங்கிரஸ் தங்கள் கூட்டணிக்கு வரும் என்று நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. எட்டா கனிக்கு கொட்டாவி விடுகிறது அதிமுக. சுனில் கனகூலு எடப்பாடிக்கு ஆதரவாக காங்கிரஸிடம் பேசுவார்கள் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் அதெல்லாம் பொய். காங்கிரஸ் - அதிமுக கூட்டணி வரும் என்றெல்லாம் வரும் என்று சொன்னார்கள்.
அது எதுவுமே நடக்கவில்லை. இப்போது அதிமுக பரிதாபமாக போய்விட்டது. அதிமுகவின் பகல் கனவு எல்லாம் தோற்றுவிட்டது. கூட்டணியை ஸ்டாலின் திறம்பட கையாண்டு வருகிறார். அவர் கூட்டணியை உடைக்காமல் பார்த்து கொண்டு இருக்கிறார். அது வெற்றி கூட்டணி. ஆர் கே நகரை தவிர வேறு எங்கும் தோல்வி அடையாத அணி.
. எடப்பாடி எவ்வளவு முயன்றும் கூட அதிமுக - காங்கிரஸ் கூட்டணி அமையவில்லையே. எவ்வளவு முயன்றும் காங்கிரஸ் இறங்கி வரவில்லையே. 2026ல் கூட்டணியை உறுதி செய்துதான் 2024ல் காங்கிரஸ் - திமுக கூட்டணியே மேற்கொள்ளப்பட்டது. இப்போது நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று செல்வப்பெருந்தகை சொல்கிறார்.
கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். அமைச்சர் ஆக வேண்டும். திமுக தனியாக ஆட்சி அமைக்க கூடாது. கூட்டணி ஆட்சிதான் வேண்டும் என்பதற்காக இப்படி எல்லாம் பேசுகிறார். ஆனால் ஸ்டாலின் ராகுலிடம் பேசுகிறார். கூட்டணி டீலிங் அவர்களுடன் பேசுக்கொள்கிறார். இப்படி இருக்க ராகுலை தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி நினைப்பதுதான் காமெடியே.. என்று மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications