Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளாம்பாக்கம் பஸ், ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை பணி விறுவிறுப்பு.. ஜனவரியில் சாத்தியமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆனால் ஜனவரியில் புதிய ரயில் நிலையம் திறப்பது நடைமுறையில் சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்னும் பணிகள் முழுமையாக முடியவில்லை.. ஆகாய நடைபாதை பணிகளும் முழுமையாக முடியவில்லை.. எனவே தான் இந்த கேள்விகள் எழுந்துள்ளது.

சென்னை புறநகரில் உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னமும் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறக்கப்படவில்லை. கிளாம்பாக்கம்பேருந்து நிலையத்தில் இருந்து தான் சென்னை மாநகர மக்களுக்காக தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

Is it possible to open the new kilambakkam railway station in January What is the problem really

கிளாம்பாக்கத்தை பொறுத்தவரை சென்னை பாரிமுனை மற்றும் கோயம்பேட்டில் இருந்து சுமார் 30 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. பழைய சென்னையின் பகுதிகளை கணக்கிட்டால் 30 முதல் 40 கிமீ தூரத்தில் இருக்கிறது. இதனால் மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அணுகுவது சவாலாக இருக்கிறது. தூரம் ஒரு காரணம் என்றால், ரயில் நிலையம் இல்லை.. அருகிலேயே ரயில் பாதை சென்ற போதிலும் சென்னை மக்கள் ரயிலில் போய் இறங்க முடியாத நிலை இருக்கிறது.

கிளாம்பாக்கம் போக வேண்டும் என்றால் பேருந்தில் மட்டுமே போக முடியும். இல்லை ரயில் போக வேண்டும் என்று விரும்பினால், வண்டலூர் அல்லது ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தில் இறங்கி வெகு தூரம் நடந்து சென்றோ அல்லது ஆட்டோ மூலம் பயணித்தோ செல்ல வேண்டிய நிலை இன்று வரை இருக்கிறது. இதனால் பலர் தாம்பரம் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து பஸ் மூலம் கிளாம்பாக்கத்துக்கு சென்று வருகிறார்கள்.

இதற்கு தீர்வு காணும் வகையில் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. தற்போது அங்கு ஒரு நடைமேடை அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும் மற்றோரு நடைமேடை அமைக்கும் பணி நடக்கிறது. இந்த பணிகள் முடிந்தாலும் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை திறக்க முடியாத நிலையே இருக்கிறது. ஏனெனில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தையும், ரயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட்ட பின்னரே திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆகாய நடைபாதை அமைப்பதில் தொய்வு ஏற்பட்டு வந்தது. இதனால் புதிய ரயில் நிலையத்தை திறப்பதிலும் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.

இதனால் கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையம் கடந்த ஜூலை மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என முதலில் சொல்லப்பட்டு, பின்னர் அதை ஜனவரிக்கு தள்ளிவைத்திருக்கிறார்கள். தற்போது ஆகாய நடைபாதை அமைக்கும் பணி தற்போது முழுவீச்சில் தீவிரமாக நடந்து வருகிறது. பேருந்து நிலையத்துக்கு முன்பு உள்ள சாலையின் குறுக்கே ஆகாய நடைபாதை செல்லும் வகையில் இரும்பு பாலத்தை தூக்கி நிறுத்துவதற்கான ஆயத்த பணிகள் நடக்கிறது. விரைவில் அந்த பணிகள் முடிவடைய போகிறது அதன் பின்னர், ரயில் நிலையம் வரை நடைபாதையை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.

அதேநேரம் ரயில் நிலையத்தில் நடைமேடை அமைப்பதுடன், கழிவறை வசதி மற்றும் டிக்கெட் கவுண்டர் வசதி போன்றவையும் அமைக்க வேண்டியுள்ளது. எல்லா பணிகளையும் முடித்துவிட்டு திறந்தால் தான் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால், ஜனவரியில் முடிக்க முடியுமா என்ற கேள்விகள் உள்ளது. எனவே பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை திறப்பது என்பது அதிகாரிகளின் கைகளில் தான் உள்ளது. பணிகள் விறுவிறுப்பாக நடக்காவிட்டால் மீண்டும் கிளம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு தள்ளிப்போகவே வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+