Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாமக்கல் மாவட்டத்தில் சிலிண்டர் பெற KYC.. கேஸ் ஏஜென்சியில் மக்களுக்கு ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவதற்கு கே.ஒய்.சி அப்டேட் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனால் சிலிண்டர் பாரம் ஏற்றி வந்த வாகனத்தை துரத்தி சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து சிலிண்டரை பெறும் நிலையே ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிலிண்டர் தட்டுப்பாடு கடுமையாக உள்ள நிலையில், சிலிண்டர் பெறுவதற்கு கே.ஒய்.சி அப்டேட் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், மக்கள் அவதிப்படுகிறார்கள். தற்போது சமையல் எரிவாயு இணைப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்களின் KYC விவரங்களைச் சரிபார்ப்பது அவசியமாக்கப்பட்டிருக்கிறது. இது புதியது கிடையாது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே சிலிண்டர் விநியோகஸ்தர்கள் வாடிக்கையாளர்களிடம் பயோமெட்ரிக் அல்லது ஆதார் சரிபார்ப்பை வலியுறுத்தி வருகிறார்கள்.

Is KYC update mandatory to get cylinder in Namakkal district People gather at gas agency

ஏன் KYC அவசியம்?

தகுதியுள்ள பயனாளர்களுக்கு மட்டுமே மானியம் சென்றடைவதை உறுதி செய்ய கே.ஒய்.சி அப்டேட்டை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. இதேபோல் ஒரே பெயரில் பல இணைப்புகள் வைத்திருப்பதைத் தடுக்கவும், முறையற்ற பயன்பாட்டைக் குறைக்கவும் மத்திய அரசு விரும்புகிறது.
இந்த சூழலில் நீண்ட நாட்களாக KYC புதுப்பிக்காத கணக்குகள் 'முடக்கப்பட்ட' நிலைக்குச் செல்லும் அபாயமும் இருக்கிறது. இதனால் சிலிண்டர் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் பலர் கேஸ் ஏஜென்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆதார் அட்டை மற்றும் எரிவாயு புத்தகத்தை சமர்ப்பித்து கைரேகை பதிவு மூலம் சரிபார்க்கிறார்கள். இந்தியன் ஆயில் , பாரத் கேஸ் அல்லது ஹெச்பி பே போன்ற செயலிகள் மூலம் 'Face Authentication' (முக அடையாளம்) வழியாக வீட்டிலிருந்தே KYC-ஐ முடிக்க வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறநது. சில பகுதிகளில் சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர்களே இதற்கான இயந்திரத்தைக் கொண்டு வந்து சரிபார்ப்பை செய்து வந்தார்கள்.

இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவதற்கு கே.ஒய்.சி அப்டேட் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி
நாமக்கல் மாவட்டத்தில் கே.ஒய்.சி விவரங்கள் புதுப்பிக்காதவர்களுக்கு சிலிண்டர் வழங்க முடியாது என எரிவாயு முகவர்கள் தெரிவித்துள்ளதாவும், பலர் பதிவு செய்திருந்தும் சிலிண்டரை பெற முடியாமல் அவதியடைந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனால் பல்வேறு எரிவாயு முகவர் அலுவலகங்களில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து கே.ஒய்.சி அப்டேட் செய்து வருகின்றனர்.

சமையல் எரிவாயு விநியோகத்தில் தாமதம் ஏற்படுவதால் தினசரி வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும், இன்று வேலையை விட்டுவிட்டு சிலிண்டர் எடுக்க வந்தால் KYC அப்டேட் என கூறி அலைகழிப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+