நாமக்கல் மாவட்டத்தில் சிலிண்டர் பெற KYC.. கேஸ் ஏஜென்சியில் மக்களுக்கு ட்விஸ்ட்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவதற்கு கே.ஒய்.சி அப்டேட் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனால் சிலிண்டர் பாரம் ஏற்றி வந்த வாகனத்தை துரத்தி சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து சிலிண்டரை பெறும் நிலையே ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிலிண்டர் தட்டுப்பாடு கடுமையாக உள்ள நிலையில், சிலிண்டர் பெறுவதற்கு கே.ஒய்.சி அப்டேட் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், மக்கள் அவதிப்படுகிறார்கள். தற்போது சமையல் எரிவாயு இணைப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்களின் KYC விவரங்களைச் சரிபார்ப்பது அவசியமாக்கப்பட்டிருக்கிறது. இது புதியது கிடையாது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே சிலிண்டர் விநியோகஸ்தர்கள் வாடிக்கையாளர்களிடம் பயோமெட்ரிக் அல்லது ஆதார் சரிபார்ப்பை வலியுறுத்தி வருகிறார்கள்.

ஏன் KYC அவசியம்?
தகுதியுள்ள பயனாளர்களுக்கு மட்டுமே மானியம் சென்றடைவதை உறுதி செய்ய கே.ஒய்.சி அப்டேட்டை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. இதேபோல் ஒரே பெயரில் பல இணைப்புகள் வைத்திருப்பதைத் தடுக்கவும், முறையற்ற பயன்பாட்டைக் குறைக்கவும் மத்திய அரசு விரும்புகிறது.
இந்த சூழலில் நீண்ட நாட்களாக KYC புதுப்பிக்காத கணக்குகள் 'முடக்கப்பட்ட' நிலைக்குச் செல்லும் அபாயமும் இருக்கிறது. இதனால் சிலிண்டர் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் பலர் கேஸ் ஏஜென்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆதார் அட்டை மற்றும் எரிவாயு புத்தகத்தை சமர்ப்பித்து கைரேகை பதிவு மூலம் சரிபார்க்கிறார்கள். இந்தியன் ஆயில் , பாரத் கேஸ் அல்லது ஹெச்பி பே போன்ற செயலிகள் மூலம் 'Face Authentication' (முக அடையாளம்) வழியாக வீட்டிலிருந்தே KYC-ஐ முடிக்க வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறநது. சில பகுதிகளில் சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர்களே இதற்கான இயந்திரத்தைக் கொண்டு வந்து சரிபார்ப்பை செய்து வந்தார்கள்.
இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவதற்கு கே.ஒய்.சி அப்டேட் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி
நாமக்கல் மாவட்டத்தில் கே.ஒய்.சி விவரங்கள் புதுப்பிக்காதவர்களுக்கு சிலிண்டர் வழங்க முடியாது என எரிவாயு முகவர்கள் தெரிவித்துள்ளதாவும், பலர் பதிவு செய்திருந்தும் சிலிண்டரை பெற முடியாமல் அவதியடைந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனால் பல்வேறு எரிவாயு முகவர் அலுவலகங்களில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து கே.ஒய்.சி அப்டேட் செய்து வருகின்றனர்.
சமையல் எரிவாயு விநியோகத்தில் தாமதம் ஏற்படுவதால் தினசரி வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும், இன்று வேலையை விட்டுவிட்டு சிலிண்டர் எடுக்க வந்தால் KYC அப்டேட் என கூறி அலைகழிப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications