நடுக்கம் தரும் ஓபிஎஸ் மகன்.. தம்பிதுரை தயவை நாடும் எடப்பாடியார்.. ராஜ்யசபா சீட் ரெடி!
Recommended Video
சென்னை: ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியால் எடப்பாடியார் தரப்பு ரொம்பவே நடுங்கி போயுள்ளதாம்.
தேர்தலுக்கு முன்பேயே சொந்த கட்சிக்கு கூட பிரச்சாரம் செய்யாத நிலையில், பிரதமர் மோடி தேனிக்கு சென்று ரவீந்திரநாத்துக்காக ஆதரவு திரட்டினார். இதையடுத்து மகனுடன் ஓபிஎஸ்-ன் வாரணாசி பயணம் அமைந்தது.
"அம்மா இறந்ததில் இருந்து டம்மியாக உள்ளதாகவும், எடப்பாடியின் கையே ஓங்கி இருப்பதாகவும்" ஓபிஎஸ் பாஜக தலைமையிடம் புலம்பியதாகவும் செய்திகள் வந்தன.

மத்திய அமைச்சர்
இதனிடையேதான், இப்போது வேறு எங்கேயுமே அதிமுக ஜெயிக்காத நிலையில் தேனியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. இப்போது மகன் வெற்றி பெற்றுள்ளதால், ஓபிஎஸ்-ன் செல்வாக்கு அதிமுகவிலேயே உயர்ந்துள்ளது. மகனுக்கும் மத்திய அமைச்சர் பதவி கிடைக்க போகிறது.

பனிப்போர்
ஏற்கனவே ஓபிஎஸ், இபிஎஸ் புகைச்சல், பனிப்போர் நீண்டு வரும் நிலையில், ரவீந்திரநாத்தின் வெற்றி எடப்பாடி தலைமைக்கு தலைவலியைதான் தந்துள்ளதாம். ஒருவேளை மத்திய அமைச்சராகி விட்டால், ஓபிஎஸ்-ன் பலம் இன்னும் கூடிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாம். தேசிய அரசியலிலும் ஓபிஎஸ் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிட்டால், தன் நிலைமை இன்னும் பரிதாபம் ஆகிவிடும் என்பதை உணர்ந்துள்ளார்.

மிரட்டும் திமுக
மேலும் 2 வருட கால ஆட்சியை எந்த குறைவின்றி நகர்த்தும் நெருக்கடியில் எடப்பாடி உள்ளார். மற்றொருபுறம் 103 எம்எல்ஏக்களை வைத்து மிரட்டி வருகிறது திமுக தரப்பு. இதில் ஓபிஎஸ்-ன் செல்வாக்கு கூடிவிட்டால், இருக்கும் மதிப்பையும் இழக்க நேரிடுமோ என்ற பயம் முதல்வர் தரப்பை சூழ்ந்துள்ளதாம்.

தம்பிதுரை
அதனால் முதல்வேலையாக, டெல்லிக்கு தன் தரப்பிலிருந்து யாராவது ஒருநம்பிக்கைக்கு உரியவரை ராஜ்யசபாவுக்கு அனுப்பலாம் என யோசித்துள்ளராம். அதன்படி முதல்ரின் முதல் சாய்ஸ் சாட்சாத் தம்பிதுரையேதான்!

நிலைப்பாடு
ஆரம்பம் முதலே விசுவாசியாக இருப்பவர். பட்ஜெட் தாக்கலின்போது பாஜகவை கடுமையாக எதிர்த்தவர். அந்த அவையில் கூட அன்றைய தினம் தம்பிதுரை உட்காரவே இல்லை. அந்த அளவுக்கு பாஜக மீது வெறுப்பு. ஆனால் எப்போது அதிமுக தலைமை பாஜகவுடன் கூட்டணி வைத்ததோ, அப்போதே தன்னுடைய நிலைப்பாட்டையும் மாற்றிகொண்டவர் தம்பிதுரை. உடனே கரூர் தொகுதியும் இவருக்கு ஒதுக்கப்பட்டது.

எடப்பாடி
எனினும் மக்களின் அதிருப்தியால் தோல்வியை தழுவினார். பலதரப்பில் இருந்து பலவாறாக தம்பிதுரையை விமர்சனம் செய்தாலும், இந்த நிமிடம் வரை எடப்பாடியாருக்கு ஆதரவாக இருந்து வருகிறார். நம்பிக்கைக்கு பாத்திரமாக திகழ்கிறார். எப்போது எடப்பாடி டெல்லி சென்றாலும் பக்கத்திலேயே உரசி நின்று பக்க பலமாக நின்றவர் தம்பிதுரைதான்.

பீதி
அதனால் இந்த முறை தம்பிதுரை ராஜ்யசபா உறுப்பினராக அனுப்பி வைத்தால், பல வகையில் தனக்கு சவுகரியம் நடக்கும் என எடப்பாடியார் நம்புகிறாராம்! ரவீந்திரநாத்தின் வெற்றி அவ்வளவு பீதியை எடப்பாடிக்கு ஏற்படுத்தி உள்ளதாம்!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications