"உங்களுக்கே புரியும்".. பட்டென சொன்ன கமல்ஹாசன்.. திமுக + காங்கிரஸ் + மநீம.. அப்போ கன்பார்ம்டா?
சென்னை: தமிழ்நாட்டில் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள், வியூகங்கள் தொடர்பான விவாதங்கள் இப்போதே எழுந்துள்ளன. இந்த நிலையில்தான் மக்கள் நீதி மய்யம் யாருடன் கூட்டணி வைக்கும் என்று கேள்விகள் எழுந்துள்ளன.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 17 மாதங்களுக்கும் மேல் உள்ளது. ஆனாலும் இப்போதே தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி தொடர்பான பேச்சுகள், பேட்டிகள், ஆலோசனைகள் தொடங்கிவிட்டன.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்கி வைத்தது என்னவோ எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிதான். 2024 லோக்சபா தேர்தலில் மெகா கூட்டணி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னதுதான் இந்த விவாதம் நடக்க காரணம்.

எடப்பாடி என்ன சொன்னார்?
நாமக்கல் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைப்போம். மெகா கூட்டணியாக இது இருக்கும். அதிமுக அழிந்துவிடும் என்று நினைப்பவர்களின் கனவு பலிக்காது. பல காலமாக இந்த இயக்கம் அழிந்துவிடும் என்று நினைப்பவர்கள் ஏமாந்து போய் இருக்கிறார்கள். அதுதான் இப்போதும் நடக்கும். தமிழ்நாட்டில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சியை நிலைநிறுத்துவோம். எங்கள் மீது வழக்குகளை போட்டு எங்களை முடக்க முடியாது. அதற்கு நாங்கள் விட மாட்டோம், என்று கூறினார்.

காங்கிரஸ்
இந்த நிலையில் பாஜக கூட்டணியை முறித்துவிட்டு எடப்பாடி காங்கிரசுடன் கூட்டணி வைக்க போவதாக செய்திகள் வந்தன. அதாவது அதிமுக + காங்கிரஸ் + விசிக + மக்கள் நீதி மய்யம் சேர்ந்து கூட்டணி வைக்கும். இந்த கூட்டணியைத்தான் எடப்பாடி மெகா கூட்டணி என்று கூறுகிறார். அவரின் மெகா கூட்டணியில் பாஜகவிற்கு இடம் இல்லை என்றெல்லாம் கருத்துக்கள் வைக்கப்பட்டு வந்தன. இதில் மக்கள் நீதி மையம் யாருடன் கூட்டணி வைக்கும் என்ற கேள்விகள் தீவிரமாக எழுந்து வந்தன. அதிமுகவின் மெகா கூட்டணியா, திமுகவின் கூட்டணியா அல்லது தனியாக நிற்குமா என்ற கேள்வி எழுந்தது.

ஆலோசனை
இது தொடர்பாக கடந்த 16ம் தேதி கமல்ஹாசன் இது தொடர்பாக மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையில் கூட்டணி பற்றி பேசப்பட்டு இருக்கிறது. யாருடன் கூட்டணி வைக்கலாம், கூட்டணி வைத்தால் எத்தனை இடங்களை கேட்கலாம் என்றெல்லாம் ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறதாம். எம்பி தேர்தலில் போட்டியிடலாம் என்பது குறித்தும் கமல்ஹாசன் ஆலோசனை செய்து இருக்கிறாராம். அதாவது எம்பி தேர்தலில் கூட்டணி சார்பாக நின்று டெல்லிக்கு செல்லலாமா என்றும் கமல்ஹாசன் ஆலோசனை செய்து இருக்கிறாராம்.

என்ன நடந்தது?
இதையடுத்தே கமல்ஹாசன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர்.. நாங்கள் என்ன கூட்டணி வைக்க போகிறோம் என்பது உங்களுக்கு விரைவில் புரிய வரும். நான் என்ன திசையில் செல்கிறேன் என்று நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். நீங்களே என் பயணத்தை புரிந்து கொண்டால், நாங்கள் யாருடன் கூட்டணி வைக்க போகிறோம் என்பது புரிந்துவிடும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அவரின் இந்த பேச்சு காரணமாக.. எங்கே மக்கள் நீதி மய்யம் திமுக + காங்கிரஸ் கூட்டணியில் இணைகிறதோ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. இந்த கேள்வி எழுவதற்கு காரணம் இருக்கிறது.

கூட்டணி எப்படி?
நீங்களே என் பயணத்தை புரிந்து கொண்டால், நாங்கள் யாருடன் கூட்டணி வைக்க போகிறோம் என்பது புரிந்துவிடும் என்று கமல்ஹாசன் குறிப்பிட்டு இருக்கிறார். அதன்படியே காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் டிசம்பர் 24ல் பங்கேற்க உள்ளார். 100வது நாளை கடந்து உள்ள இந்த யாத்திரை டெல்லியை விரைவில் அடைய உள்ளது. இதில் 24ம் தேதி கமல்ஹாசன் டெல்லியில் கலந்து கொள்ள இருக்கிறார். கமல்ஹாசனின் இந்த முடிவு கவனம் பெற்றுள்ளது.

உதயநிதி
இன்னொரு பக்கம் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் கமல்ஹாசன் மிகவும் நெருக்கமாக உள்ளார். திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - கமல்ஹாசன் ஆகியோர் விக்ரம் படம் வழியாக நெருக்கம் ஆனார்கள். இந்தியன் 2 உள்ளிட்ட படங்களையும் பெரும்பாலும் ரெட் ஜெயிண்ட்ஸ் நிறுவனமே ரிலீஸ் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இவர்கள் மேலும் நெருக்கமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி திமுகவுடனும், காங்கிரஸ் கட்சியுடனும் கமல்ஹாசன் நெருக்கமாக இருக்கிறார். இந்த இரண்டு விஷயங்களை வைத்து பார்க்கையில் எங்கே திமுக + காங்கிரஸ் கூட்டணியில் இணைவதற்கு கமல் திட்டமிடுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதைத்தான் நீங்களே என் பயணத்தை புரிந்து கொண்டால், நாங்கள் யாருடன் கூட்டணி வைக்க போகிறோம் என்பது புரிந்துவிடும் என்று கமல்ஹாசன் குறிப்பிட்டு இருக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications