Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக ஆளாத மாநிலங்களின் சட்டசபை மரபுகளை ஆளுநர்கள் சிதைப்பது மோடிக்கு தெரியாதா? அமைச்சர் ரகுபதி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடாளுமன்றத்தில் அவை மரபுகளை பற்றி பேசி சிலாகிக்கும் மோடி அவர்களுக்கு பாஜக ஆளாத மாநிலங்களின் சட்டமன்ற மரபுகளை ஆளுநர்கள் எவ்வாறு சிதைக்கின்றனர் என்பது தெரியாதா? என்று தமிழ்நாடு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தில் அவை மரபுகளை பற்றி பேசி சிலாகிக்கும் மோடி அவர்களுக்கு பாஜக ஆளாத மாநிலங்களின் சட்டமன்ற மரபுகளை ஆளுநர்கள் எவ்வாறு சிதைக்கின்றனர் என்பது தெரியாதா?

narendra modi tamilnadu governors

தமிழ்நாட்டில் திரு.மோடி நியமித்திருக்கும் ஆளுநர் ரவி அவர்களோ தமிழ்நாடு அரசின் உரையை வாசிப்பது கூட இல்லை!

ஆளுநரோடு முரண்பட்ட போதிலும் பேரவை நாகரிகம் கருதி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆளுநருக்கு மதிப்பளித்து சட்டப்பேரவையில் உரையாற்ற சபாநாயகர் மூலம் அழைப்பு விடுத்தார். ஆனால் நாகரிகம் என்றால் கிலோ எத்தனை ரூபாய் என கேட்கும் அளவு நடந்து கொள்ளும் ஆளுநர் ரவி பேரவை மாண்பை மதிக்காமல் உரையை படிக்காமல் உதாசீனப்படுத்தினார்.

சட்டப்படி மாநில அரசு தயாரித்து கொடுக்கும் உரையை தான் ஆளுநர் வாசிக்க வேண்டும் அதை தான் நாம் வலியுறுத்தினோம். மாநில அரசிற்கு கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற சட்டப்படியான உண்மையை பிரதமர் மோடியே ஒத்துக்கொள்கிறார். இனி என்ன சொல்லப் போகிறீர்கள் ஆளுநர் ரவி அவர்களே? இவ்வாறு அமைச்சர் எஸ்.ரகுபதி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியது என்ன?

நாடாளுமன்ற லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்களுக்கு பிரதமர் மோடி நேற்று பதிலளித்து பேசினார். அப்போது, அரசியல் அமைப்புச் சட்டத்தின் உயிரோட்டம் என்பது அதன் ஆன்மாவில் உள்ளது; அரசியல் சாசனத்தை வலுப்படுத்த வேண்டும் என்றால் அதன் ஆன்மா உயிர்ப்போடு இருக்க வேண்டும். அரசியல் சாசனத்தை வென்றெடுக்கும் மக்கள் இங்கே இருக்கிறோம்; ஆளுநர் பதவி என்பது மாநில அரசின் செயல்பாடுகளை பிரதிபலிப்பதாகும்; மக்களாட்சியில் அரசியல் அமைப்பு, அதன் ஆன்மாவுக்கு என்ன நடக்க வேண்டும் எனில் குஜராத்துக்கு 50 வயதான போது பொன்விழா கொண்டாடினோம்; அப்போது நான் முதல்வராக இருந்தேன்; பொன்விழா ஆண்டில் குஜராத்தின் ஆளுநர்கள் ஆற்றிய உரைகள் அனைத்தையும் புத்தகமாக தொகுத்தோம் என்று குறிப்பிட்டிருந்தார் பிரதமர் மோடி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+