ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரை சென்னையில் சுற்றி வளைத்து கைது செய்தது என்.ஐ.ஏ.. விசாரணையில் பகீர்!
சென்னை: வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையது நபில் அகமதுவை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்னையில் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கேரளா மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையது நபில் அகமது, போலி ஆவணங்கள் மூலமாக நேபாள நாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது, சென்னையில் அவரை சுற்றி வளைத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

அவரை சென்னையில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐ.எஸ் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டி, பயங்கரவாத தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.எஸ் தலைவர் சையது நபில் அகமது பல வாரங்களாக தேடப்பட்டு வந்த நிலையில், அவர் தமிழ்நாடு, கர்நாடகா என மாறி, மாறி தலைமறைவாக இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் தான் இன்று என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர்.
அவரை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரிடமிருந்து பல்வேறு ஆவணங்கள், டிஜிட்டல் பொருட்களையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளாது.
ஏற்கனவே, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஆசிஃப் என்பவர் ஈரோடு வனப்பகுதியில் தலைமறைவாக இருந்த நிலையில் அண்மையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
-
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது!












Click it and Unblock the Notifications