ராகுல் காந்தி வந்துடுவார்னு பயமா? அப்போ காட்டின அவசரம் இப்ப எங்க போச்சு? பாஜகவை விளாசிய ஸ்டாலின்!
சென்னை: ராகுல் காந்தியின் எம்.பி பதவியை நீக்குவதில் காட்டிய அவசரத்தை மீண்டும் பதவி வழங்குவதில் ஏன் பாஜக அரசு காட்டவில்லை, தகுதி நீக்கத்தை திரும்பப் பெற்றால் ராகுல் காந்தி பாராளுமன்றத்திற்கு வந்துவிடுவார் என்கிற பயமா? என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது கர்நாடகா மாநிலம் கோலாரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பியது. அந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி, நீரவ் மோடி உள்ளிட்டோரைக் குறிப்பிட்டு நாட்டில் உள்ள எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்று முடிவது ஏன்? என கேள்வி எழுப்பி இருந்தார்.

ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிராக குஜராத் மாநில பாஜக எம்.எல்.ஏ பூர்னேஷ் மோடி, சூரத் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 4 ஆண்டு கால விசாரணைக்குப் பின்னர், கடந்த மார்ச் 23ஆம் தேதி தேதி நீதிபதி எச்.எச்.வர்மா தீர்ப்பு வழங்கினார். ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்த அவர், ராகுலுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.
2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தியின் வயநாடு தொகுதி எம்.பி பதவி, தீர்ப்பு வந்த மறுநாளே பறிக்கப்பட்டது. மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி, சில வாரங்களில் டெல்லியில் தனக்கு வழங்கப்பட்டிருந்த அரசு வீட்டையும் காலி செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார்.
இதற்கிடையே சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சூரத் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். தனக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கினார். ஆனால் அவரது தண்டனைக்கு தடை விதிக்க நீதிபதி மறுத்து விட்டார்.
ராகுல் காந்தியின் சிறைத் தண்டனையை குஜராத் ஐகோர்ட்டும் உறுதி செய்து, அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து ராகுல் காந்தி, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதன்படி, நேற்று இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையும், அதைத்தொடர்ந்து நிகழ்ந்த அவரது தகுதி நீக்கமும் அவருக்கு மட்டுமின்றி, அவரை தேர்வு செய்த வாக்காளர்களின் உரிமையையும் பாதிக்கிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Why hasn't Thiru @RahulGandhi been restored as an MP despite the Supreme Court staying his conviction? Why the urgency shown to disqualify him is missing now? Is the BJP afraid of brother #RahulGandhi's presence in Parliament?#RestoreRahulGandhi #INDIA
— M.K.Stalin (@mkstalin) August 6, 2023
ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் இனி எம்.பியாக அவர் தொடர்வார். அனைத்து கூட்டத்தொடர்களிலும் பங்கேற்பார் என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை. இது தொடர்பாக பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "ராகுல் காந்தி மீதான தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அவரது எம்.பி பதவி நீக்கத்தை ஏன் திரும்பப் பெறவில்லை? அவரைத் தகுதி நீக்கம் செய்வதற்குக் காட்டிய அவசரத்தைத் திரும்பப் பெறுவதில் ஏன் காட்டவில்லை. சகோதரர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு வருகை தருவதை நினைத்து பாஜக அஞ்சுகிறதா" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications