மிஷன் சக்கஸ்.. சந்திரயான் 3 திட்டத்தின் பிரதான நோக்கமே இதுதான்! விஞ்ஞானி சொன்ன முக்கிய தகவல்
சென்னை: நிலவின் தென் துருவத்தில் இறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ள சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டரும், ரோவரும் தற்போது உறக்க நிலையில் இருக்கிறது. இதனை எழுப்ப விஞ்ஞானிகள் தொடர்ந்து முயன்று வருகின்றனர். இந்நிலையில், இந்த முயற்சி தோல்வியா? வெற்றியா? என்பது குறித்து மத்திய அரசின் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் விளக்கமளித்துள்ளார்.
நிலவின் தென் துருவத்தில் உள்ள பள்ளத்தாக்குகளில் பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாமல் இருக்கிறது. இந்நிலையில் இங்கு நீர் இருப்பதற்கான சாத்தியங்களை சந்திரயான்-1 விண்கலம் கண்டுபிடித்து சொன்னது. 312 நாட்களாக நிலவை 3,400 சுற்றுகளை சுற்றிய பின்னர்தான் இதை சந்திரயான் 1 உறுதி செய்தது. அதன் பின்னர் நிலவை யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி தொடங்கியது. இதனையடுத்து நிலவில் ரோவரை இறக்கி அதில் அதன் மூலம் ஆய்வு செய்ய கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்தியது இஸ்ரோ.

ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப தவறால் நிலவில் தரையிறங்க இருந்த ரோவர் கட்டுப்பாட்டை இழந்து நிலவில் வேகமாக மோதி உடைந்தது. இருப்பினும் இதனை கொண்டு சென்ற ஆர்பிட்டர் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. எனவே மீண்டும் மற்றொரு ரோவரை அனுப்புவது என்று முடிவெடுத்து சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த 23ம் தேதியன்று மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. விண்வெளி துறையின் முன்னோடியான ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் நிலவில் மோதி செயலிழந்த நிலையில், இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
திட்டமிட்டபடி தனது வேலையை முடித்துக்கொண்ட பிரக்யான் ரோவர், தற்போது உறக்க நிலையில் இருக்கிறது. நிலவில் தற்போது பகல் பொழுது பாதி முடிந்துள்ள நிலையில் இதுவரை லேண்டரையும், ரோவரையும் எழுப்ப மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாக பலரும் கூறியுள்ளனர். ஆனால் இது தோல்வியில்லை வெற்றிதான் என்று மத்திய அரசின் மூத்த விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனியார் செய்தி ஊடகத்தற்கு பேட்டியளித்த அவர், "நிலவில் பகல் பொழுதுக்கும் இரவு பொழுதுக்கும் இடையே இருக்கும் வெப்ப வேறுபாடு ஏறத்தாழ 200 டிகிரி செல்சியஸ். பொதுவாக அதிக வெப்பநிலையில் பொருட்கள் விரிவடையும், அதிக குளிரில் பொருட்கள் சுருங்கும் என்பது அறிவியல் விதி. இந்த விதியின் அடிப்படையில்தான் விண்கலத்தில் உள்ள பொருட்களும் பாதிப்படைந்திருக்கின்றன. சீனா போன்ற நாடுகள் அனுப்பிய விண்கலத்தில் இயற்கை கதிரியக்க மின்கலம் (பேட்டரி) பயன்படுத்தப்படுகிறது. எனவேதான் அது ஓராண்டு வரை செயல்படுகிறது.
அதேபோல இந்த ரோவரையும், லேண்டரையும் சந்திரனின் இந்த ஒரு நாள் முடிவதற்குள் எழுப்ப முடியவில்லை என்றால் அடுத்த நாளில் எழுப்ப வாய்ப்பு கிடையாது. இதனை எழுப்ப முடியாததால் இந்த திட்டம் தோல்வியா என்று பலரும் கேட்கின்றனர். இந்த திட்டத்தின் நோக்கம் என்பது நிலவை ஆய்வு செய்வது என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் சந்திரயான் 3 திட்டத்தின் நோக்கம் என்பது சரியான இடத்தில் தரையிறங்குவதுதான். நமக்கு முன்னர் விண்கலனை ஏவிய ரஷ்யாவுக்கும், பின்னர் விண்கலனை அனுப்பிய ஜப்பானுக்கும் இதுதான் நோக்கம்.
இதற்கு முன்னரும் பல நாடுகள் நிலவில் விண்கலத்தை தரையிறக்கியுள்ளன. ஆனால், அப்போது பின்பற்றப்பட்ட தொழில்நுட்பம் வேறு. இப்போது செயல்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம் வேறு. பிற்காலங்களில் நிலவில் குடியிருப்புகள் உருவானால் அங்கு பொருட்களை கொண்டு செல்ல சரியான தொழில்நுட்பம் அவசியம். அதைதான் இஸ்ரோ முயன்று பார்த்திருக்கிறது. குறிப்பிட்ட இடத்தில் திட்டமிட்டபடி பாதுகாப்பாக தரையிறங்குவதுதான் சந்திரயான் 3 திட்டத்தின் முழு நோக்கம்.
இது 100 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. அதற்கு நாம் நடத்திய ஆய்வுகள், அதில் கிடைத்த தகவல்கள் எல்லாம் போனஸ்தான். அந்த வகையில் சந்திரயான் 3 திட்டம் வெற்றிதான்" என்று கூறியுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications