கொரோனா பாதிப்பை தடுக்க ஆவி பிடிப்பது மிகவும் நல்லது.. எப்படி தெரியுமா? மருத்துவர்கள் குட்நியூஸ்
சென்னை: கொரோனா வைரஸ் காலத்திற்குப் பிறகு பலரும் அவரை மறந்து விடு தண்ணீருக்கு மாறி விட்டனர் ஆனால் சுடு தண்ணீர் குடிப்பதனால் கொரோனா நம்மை அண்டாது என நம்புகின்றனர். ஆனால் சுடு தண்ணீரை விட ஆவி பிடிப்பது கொரோனாவை ஒழிக்க உகந்தது என்கிறார்கள் மருத்துவர்கள்.
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் ஒரே நாளில் 2லட்சத்தை நெருங்கி உள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 8 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்.
நம்மை சுற்றி உள்ளவர்களால் கொரோனாவால் எளிதில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நம்மை அண்டாமல் தடுக்க நாம் வெளியில் செல்லும் போது சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முககவசம் அணிவது மிக முக்கியம். வீட்டை விட்டு வெளியே சென்று வந்த பின்னர், கட்டாயம் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்வது சிறந்தது.

வாய்ப்புகள்
அதேநேரம் கொரோனா வைரஸ் தொற்று ஏதேனும் ஒரு சூழலில் நம்மை நோக்கி வரும் வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. எனவே வாரம் ஒரு நாள் காலை மற்றும் மாலை வேளையில் ஆவிபிடிப்பது சிறந்தது என்கிறார்கள் மருத்துவர்கள்.

நுரையீரலை தாக்கும்
அதற்கு மருத்துவர்கள் சொல்லும் காரணத்தை இப்போது பார்ப்போம். கொரோனா வைரஸ் நமது மூக்கில் நான்கு ஜோடி காற்றுப் பைகளில் மறைந்து கொள்ளும் தன்மை உடையவை. அங்கிருந்து நான்கு முதல் ஐந்து நாட்கள் கழித்து அவை நுரையீரலை அடைந்து தாக்குகின்றன.

தொண்டைக்கு நல்லது
நாம் பொதுவாக சளி பிடிப்பதை தடுக்க சுடு தண்ணீர் அருந்துகிறோம். குறிப்பாக கொரோனா பரவல் அதிகரித்த பின்னர் சுடுதண்ணீருக்கு மாறியவர்கள் மிக அதிகம்- ஆனால் சுடுதண்ணீர் நமது தொண்டைக்கு மட்டுமே நன்மை பயக்கும். எனவே மூக்கின் காற்றுப் பைகளில் மறைந்திருக்கும் வைரஸ்களை அளிக்க ஆவிபிடித்தலே தலைசிறந்தது.

கொரோனா அழியும்
50 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வைரஸ் செயலிழந்து விடும். 60 டிகிரியில் பலவீனமடைந்து விடும். 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் அழிந்துவிடும். எனவே வாரத்திற்கு ஒரு நாளில் காலை மற்றும் மாலை வேளைகளில் ஆவி பிடிக்க வேண்டும். இதன்மூலம் வைரஸ்களை அழித்து விட முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications