உங்களை வரவேற்கிறேன்.. சீன அதிபரிடம் தமிழில் பேசிய மோடி.. சென்னை கனக்ட் குறித்து பெருமிதம்!
சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் சீன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி தமிழில் பேசினார்.
Recommended Video
சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் சீன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி தமிழில் பேசினார். சென்னையில் அவர்களுடன் ஆலோசனை நடத்துவது பெருமையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று தமிழகம் வந்தார். அவர் பிரதமர் மோடியை காஞ்சிபுரத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று கோவளம் தனியார் விடுதியில் இரண்டு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் இந்திய - சீன உயர்மட்ட பிரதிநிதிகள் நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தாஜ் பிஷர்மேன் கேவ் ரெசார்ட்டில் இருவரும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்..

என்ன பேசினார்
அதிகாரிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி, சீனா அதிபர் ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மோடி தமிழில் தனது பேச்சை தொடங்கி பின் ஆங்கிலத்தில் பேசினார். அவர் தனது பேச்சில், மதிப்பிற்குரிய விருந்தினரை வரவேற்கிறேன். இந்தியா- சீனா இடையே புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. இது புதிய பயணம்.

தமிழ்
உலகின் தொன்மையான மொழியான தமிழில் பேசுகிறேன். சீன அதிபரை தமிழ்நாட்டிற்கு மனதார வரவேற்கிறேன். அவரும் அதிகாரிங்களும் தமிழகத்தில் என்னுடன் இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

கலாச்சாரம்
இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே 2,000 ஆண்டுகளாக ஆழமான கலாசார வர்த்தக உறவுகள் இருக்கின்றன. மாமல்லபுரம் பயணம் மறக்க முடியாத அனுபவத்தை தந்துள்ளது. இருநாடுகளிடையே ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு ஏற்படும்.

என்ன மாற்றம்
இந்தியாவும் சீனாவும் மிக சக்தி வாய்ந்த நாடுகள். பொருளாதார ரீதியாக இரண்டு நாடுகளும் மிகவும் சக்தி வாய்ந்த நாடுகள். நாம் இப்போது நெருக்கமாகி இருப்பது பெரிய மாற்றங்களை ஏற்படுத்த போகிறது.

என்ன மாநாடு
முறைசாரா மாநாடுகள் மூலமான பேச்சுவார்த்தைகள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா சீனா இடையிலான உறவை ''சென்னை கனக்ட்'' மாற்றப்போகிறது. உஹான் சந்திப்புக்கு பிறகு இரு நாடுகள் இடையிலான உறவு மேலும் உறுதி அடைந்துள்ளது, என்று மோடி தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications