வாங்க பங்காளிகளா வாக்களிக்கலாம்... நம் தேசத்திற்கு விஸ்வாசமாய் இருக்கும் நேரமிது
சென்னை: நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்களித்து நம் தேசத்திற்கு விஸ்வாசமாய் இருக்கும் நேரமிது என்று தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இரண்டாம் கட்டமாக நாளை தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. இளம்தலைமுறை வாக்காளர்களை கவருவதற்காகவும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பிரபல நடிகர்களின் வசனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சமீபத்தில், வெளியாகி வெற்றி வாகை சூடிய நடிகர் அஜித்குமாரின் படமான விஸ்வாசம் படத்தின் தலைப்பை பயன்படுத்தி, அதில், ஜனநாயகத்தின் விஸ்வாசம் வாக்களிப்பதே என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போல், நடிகர் விஜய்யின் படமான சர்கார் பட பாணியில், 49- பி சட்டபிரிவு குறித்தும் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. அதற்காக, உங்கள் வாக்கை வேறு யாரும் பதிவு செய்திருந்தால், அதனை நீங்கள் தேர்தல் அதிகாரியிடம் தெரிவுபடுத்தி, அவரின் கேள்விகளுக்கு தக்க பதிலளித்து, வாக்குச் சீட்டு மூலம் உங்கள் வாக்கை பதிவு செய்யலாம். அதற்கு முன் படிவம் 17B-யில் உங்கள் பெயரை பதிவிடவும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
வாக்களித்து நம் தேசத்திற்கு விஸ்வாசமாய் இருக்கும் நேரமிது! #MakeYourMarkTN #GoVoteTN #ECI #LokSabhaElections2019 #Viswasam @directorsiva @SureshChandraa pic.twitter.com/pfIMwujvvL
— TN Elections CEO (@TNelectionsCEO) April 17, 2019
நாளைய சர்காரை அமைப்பது, வாக்காளர்களின் கையில் இருப்பதால் ஓட்டே துணை என்றும், பிரபல ஹாலிட் படங்களின் ஸ்டைலிலும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. நாளைக்கு நாம் என்ன பண்ணப் போறோம், ஓட்டு போட போறோம்.












Click it and Unblock the Notifications