ரூ 20 லட்சம் கொண்டு வந்ததால் பரபரப்பு.. ஆரணி எம்பி செஞ்சி ஏழுமலையிடம் வருமான வரித் துறையினர் விசாரணை
சென்னை: ரூ 20 லட்சம் கொண்டு வந்ததாக சென்னை விமான நிலையத்தில் ஆரணி எம்பி செஞ்சி ஏழுமலையிடம் வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தினர்.
நாளை கடைசி கட்ட நாடாளுமன்றத் தேர்தலும், தமிழகத்தின் 4 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் வரும் 27-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் டெல்லியிலிருந்து வந்த விமானத்தில் ரூ. 20 லட்சத்தை கொண்டு வந்ததால் விமான நிலையத்தில் ஆரணி எம்பி செஞ்சி ஏழுமலையிடம் வருமான வரித் துறையினர் விசாரணைநடத்தினர். இவர் மீண்டும் ஆரணி எம்பி தொகுதியில் போட்டியிடுகிறார்.
விசாரணையில் டெல்லியில் உள்ள தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 20 லட்சம் எடுத்து வந்ததாக செஞ்சி ஏழுமலை விளக்கம் அளித்துள்ளார். தனது மகளின் மேற்படிப்புக்காக எடுத்துவந்ததாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
தற்போது எங்கு பார்த்தாலும் பணப்புழக்கம் நடந்து வரும் நிலையில் ஒரு எம்பியிடம் ரூ. 20 லட்சத்துக்கு கணக்கு கேட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இது போல் ஆங்காங்கே ரெய்டுகளை நடத்தி வருமான வரித்துறையினரும் தேர்தல் பறக்கும் படையினரும் பண விநியோகம் நடைபெறாமல் பார்த்துக் கொள்கின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications