பூர்விகா மொபைல்ஸ் நிறுவன உரிமையாளர் வீட்டில் ஐடி ரெய்டு! 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனை
சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பூர்விகா மொபைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் யுவராஜின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். 3 இடங்களில் சுமார் 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மொபைல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையில் முன்னணி வகிக்கும் நிறுவனம் பூர்விகா மொபைல்ஸ். தமிழ்நாடு மட்டும் இன்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் பூர்விகா நிறுவனத்தின் கடைகள் உள்ளன. இந்த நிலையில், தான் பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளர் வீட்டில் இன்று காலை முதலே ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது.

வரி ஏய்ப்பு புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கோடம்பாக்கம் பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளர் யுவராஜ் வீடு மற்றும் அவருக்கு சொந்தமாக உள்ள பள்ளிக்கரணை மற்றும் பல்லாவரத்தில் உள்ள இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இரண்டு கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை 7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மூன்று இடங்களிலும் சேர்த்து 15 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனையின் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், வருமான வரித்துறை சோதனை விரிவு அடையும் என எதிபார்க்கப்படுகிறது. சோதனைக்கு பிறகே எவ்வளவு வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளது உள்ளிட்ட விவரங்கள் தெரிய வரும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதல் கட்டமாக தற்போது 3 இடங்களில் சுமார் 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையில் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் பூர்விகா நிறுவனத்தின கிளைகளிலும் சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்று காலை முதல் பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளர் வீட்டில் நடைபெறும் இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications