சென்னையில் தொழிலதிபர் வீட்டில் 3வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு.. பரபரக்கும் சோதனை!
சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தொழிலதிபர் பசுபதி கோபாலன் வீட்டில் 3வது நாளாக இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் சுமார் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஆர்.ஏ.புரத்தில், பெனிஸ் எனர்ஜி என்ற சோலார் பேனல் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தொழிலதிபர் பசுபதி கோபாலன் உள்ளார். இவர் சன் எடிசன் நிறுவனத்தை நடத்தி வந்தவர்.

பசுபதி கோபாலன் நடத்தி வரும் பெனிஸ் எனர்ஜி நிறுவனம் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியதால், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள, அதன் அலுவலகத்திலும், பசுபதி கோபாலன் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கடந்த 2 நாட்களாக இந்தச் சோதனை நடந்து வரும் நிலையில், இன்று 3வது நாளாக இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் 10 இடங்கள், மும்பை உட்பட, நாடு முழுதும் 30 இடங்களில், வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.
மேலும், சென்னை தியாகராய நகர், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள 'ஒயிட் பயர்' என்ற வைர நகைக்கடை, ஜி.என்.செட்டி சாலையில் உள்ள ஈ.எப்.ஐ.எப் என்ற வைர நகைக்கடையிலும், அதன் உரிமையாளர் வீடுகளிலும், சோதனை நடைபெற்றுள்ளது.
சென்னை தியாகராய நகர், பசுல்லா சாலையில், ரெபெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற தனியார் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் செயல்படுகிறது. இந்நிறுவனம் சார்பில், நிலக்கரி இறக்குமதி, மின்சார கார்களுக்கான பேட்டரி தயாரிப்பு, குளிர்சாதனம் மற்றும் குளிர்பதன பெட்டிகளுக்கான உதிரி பாகங்கள் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்கள் நடத்தப்படுகின்றன.
இந்நிறுவனத்தின் தொழிற்சாலை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளன. வருமான வரித்துறை அதிகாரிகள், ரெபெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளில், நேற்று சோதனை நடத்தினர்.
-
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
கோயம்பேட்டில் மூட்டை மூட்டையாக தேங்கி கிடக்கும் காய்கறிகள்.. வியாபாரிகள் கனவிலும் நினைக்காத மாற்றம் -
அதிமுக கோட்டையில் 'தென்னந்தோப்பு'! சசிகலாவின் மாஸ்டர் பிளான்! இரட்டை இலைக்கு செக் வைக்கும் 'பச்சை'! -
பரங்கிமலை இன்று முதல் சென்னையின் ‘ஹாட்ஸ்பாட்’.. கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் அட்டவணை வெளியீடு! -
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்! -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம்












Click it and Unblock the Notifications