அப்படிப்போடு.. லலிதா ஜுவல்லரியில் கணக்கில் வராத ரூ.1000 கோடி.. அதிர வைக்கும் அறிவிப்பு
சென்னை: லலிதா ஜுவல்லரியில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிரபல லலிதா ஜூவல்லரி நகைக் கடைக்கு சொந்தமான இடங்களில், கடந்த மார்ச் 4ம் தேதி முதல் வருமான வரிசோதனை நடைபெற்று வருகிறது. அதன் தலைமையிடமான சென்னை, மதுரை, கோவை என 27 இடங்களில் வருமான வரிசோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், லலிதா ஜுவல்லரி நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பழைய நகையை வாங்கி புதிதாக மாற்றும்போது சேதாரம் என்று பலகோடி ரூபாய் கணக்கில் காட்டப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ஏராளமான பணத்தினை பரிவர்த்தனை செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், போலி கணக்குகள் மூலம் தங்கத்தை வாங்கியது போலவே போலி கணக்குகள் மூலம் தங்கத்தை விற்று வந்ததும் தெரியவந்திருக்கிறது. நகைக்கடையில் இருந்து 1.2 கோடி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications