சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
Subscribe to Oneindia Tamil
சென்னை: தி.நகர், மயிலாப்பூர், மந்தைவெளியில் உள்ள தனியார் நிறுவனங்களில் காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மணல் குவாரி, குத்தகைதாரர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், அமைச்சர்கள் வீடுகளில் நடைபெற்ற சோதனையை தொடர்ந்து தற்போது தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் தி. நகர், மயிலாப்பூர், மந்தைவெளி பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது, அமலாக்கத்துறை சோதனை நடத்துவது அதிகரிப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications