சசிகலா- நடராஜன்தான் காரணம்.. அத்தை மரணம் இயற்கையானது அல்ல.. ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா பகீர்
சென்னை: என் அத்தையின் மரணம் இயற்கையானது அல்ல என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் அடைந்த போது அவரது அண்ணன் மகள் தீபா, அத்தையை பார்க்க தன்னை சசிகலா கோஷ்டியினர் அனுமதிக்கவில்லை என செய்தியாளர்களிடம் புகார் தெரிவித்திருந்தார். அப்பல்லோவில் சிகிச்சை மேற்கொண்டிருந்த தனது அத்தையை பார்க்க சென்ற போது தன்னை சசிகலா பார்க்கவிடவில்லை என்றும், இறுதி சடங்குகளுக்காக வந்த போதும் சசிகலா தரப்பினர் போலீஸாரை விட்டு தன்னை தடுத்து நிறுத்தியதாகவும் பரபரப்பு புகாரை தெரிவித்திருந்தார்.
அத்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் சசிகலாவின் வாக்குமூலத்தில் முரண்பாடு இருப்பதாகவும் ஜெ தீபா தெரிவித்திருந்தார்.

உண்மை
மேலும் உண்மையை மறைக்க தனது தாயார் விஜயலட்சுமி மீது சசிகலா, ஆணையத்தில் வீண் பழிகளை சுமத்தியதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் தன்னை 1994 ஆம் ஆண்டு கொல்வதற்கு சசிகலா தரப்பு திட்டம் தீட்டியதாகவும் அதிலிருந்து தான் தப்பி பிழைத்ததாகவும் தெரிவித்திருந்தார்.

கொலை முயற்சி
இது ஒரு முறை அல்ல, பல முறை தன்னை கொலை செய்ய சதி நடைபெற்றதாாகவும் குற்றம்சாட்டிய அவர் திவாகரனை ஜெயலலிதா வளர்ப்பு மகனாக தத்தெடுக்கவே சசிகலா தன்னை அத்தையுடன் நெருங்கவிடவில்லை என்றும் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

இயற்கையானது அல்ல
இந்த நிலையில் தமிழ் சேனலுக்கு ஒன்றிற்கு ஜெ.தீபா பேட்டி அளித்துள்ளார். அதில் ஜெ தீபா கூறியிருக்கையில், ஆறுமுகசாமி ஆணையத்தில் நிறைய விஷயங்கள் தெளிவாக இல்லை. இது குறித்து மேலும் விசாரணை நடத்த வேண்டும். 5 ஆண்டுகள் ஆணையம் செயல்பட்டும் நிறைய விஷயங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. எனது அத்தையின் மரணம் இயற்கையானது இல்லை.

சசிகலா சதி
என்னை எனது அத்தைக்கு பிடிக்காது என சசிகலா கட்டுக்கதைகளை தெரிவித்துள்ளார். என்னை அத்தைக்கு பிடித்ததால்தான் நாங்கள் அவரை நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டார் சசிகலா. என் அத்தையின் அரசியல் அதிகாரத்தின் மீது சசிகலா குடும்பத்திற்கு ஒரு ஆசை இருந்தது. என் அத்தையை கொல்ல வேண்டும் என சசிகலாவும் நடராஜனும் தெரிவித்தனர். இதற்கு சிலர் வேண்டாம் என்றனர் என பகீர் தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.
-
தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு! -
ஒன்றரை மாதத்தில் என்ன ஆகும்? அரியணை ஆட்டம்.. 2016 Vs 2021.. தமிழக தேர்தல் களத்தின் 'பவர்' ரிப்போர்ட் -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
லாஸ்ட்டில் ராமதாஸ் "இவருடன்" கூட்டணியா? வடக்கையும் தெற்கையும் அதிரவைக்கும் அரசியல்வாதி யார்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
இது திமுக கோட்டை.. அதிமுகவுக்கு ஒத்துவராது.. சென்னையை கூட்டணி கட்சியிடம் தாரைவார்க்க தயாரான எடப்பாடி -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்? -
மகளிர் உரிமை தொகை டூ விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் வரை.. 10 வாக்குறுதிகளை கொடுத்த மம்தா பானர்ஜி! -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக -
காத்திருக்கும் எதிர்பாராத ட்விஸ்ட்.. கேரள தேர்தலில் இப்படியொரு சம்பவமா.! புதிய தேர்தல் சர்வே -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல்












Click it and Unblock the Notifications