Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சசிகலா- நடராஜன்தான் காரணம்.. அத்தை மரணம் இயற்கையானது அல்ல.. ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா பகீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: என் அத்தையின் மரணம் இயற்கையானது அல்ல என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் அடைந்த போது அவரது அண்ணன் மகள் தீபா, அத்தையை பார்க்க தன்னை சசிகலா கோஷ்டியினர் அனுமதிக்கவில்லை என செய்தியாளர்களிடம் புகார் தெரிவித்திருந்தார். அப்பல்லோவில் சிகிச்சை மேற்கொண்டிருந்த தனது அத்தையை பார்க்க சென்ற போது தன்னை சசிகலா பார்க்கவிடவில்லை என்றும், இறுதி சடங்குகளுக்காக வந்த போதும் சசிகலா தரப்பினர் போலீஸாரை விட்டு தன்னை தடுத்து நிறுத்தியதாகவும் பரபரப்பு புகாரை தெரிவித்திருந்தார்.

அத்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் சசிகலாவின் வாக்குமூலத்தில் முரண்பாடு இருப்பதாகவும் ஜெ தீபா தெரிவித்திருந்தார்.

உண்மை

உண்மை

மேலும் உண்மையை மறைக்க தனது தாயார் விஜயலட்சுமி மீது சசிகலா, ஆணையத்தில் வீண் பழிகளை சுமத்தியதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் தன்னை 1994 ஆம் ஆண்டு கொல்வதற்கு சசிகலா தரப்பு திட்டம் தீட்டியதாகவும் அதிலிருந்து தான் தப்பி பிழைத்ததாகவும் தெரிவித்திருந்தார்.

கொலை முயற்சி

கொலை முயற்சி

இது ஒரு முறை அல்ல, பல முறை தன்னை கொலை செய்ய சதி நடைபெற்றதாாகவும் குற்றம்சாட்டிய அவர் திவாகரனை ஜெயலலிதா வளர்ப்பு மகனாக தத்தெடுக்கவே சசிகலா தன்னை அத்தையுடன் நெருங்கவிடவில்லை என்றும் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

இயற்கையானது அல்ல

இயற்கையானது அல்ல

இந்த நிலையில் தமிழ் சேனலுக்கு ஒன்றிற்கு ஜெ.தீபா பேட்டி அளித்துள்ளார். அதில் ஜெ தீபா கூறியிருக்கையில், ஆறுமுகசாமி ஆணையத்தில் நிறைய விஷயங்கள் தெளிவாக இல்லை. இது குறித்து மேலும் விசாரணை நடத்த வேண்டும். 5 ஆண்டுகள் ஆணையம் செயல்பட்டும் நிறைய விஷயங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. எனது அத்தையின் மரணம் இயற்கையானது இல்லை.

சசிகலா சதி

சசிகலா சதி

என்னை எனது அத்தைக்கு பிடிக்காது என சசிகலா கட்டுக்கதைகளை தெரிவித்துள்ளார். என்னை அத்தைக்கு பிடித்ததால்தான் நாங்கள் அவரை நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டார் சசிகலா. என் அத்தையின் அரசியல் அதிகாரத்தின் மீது சசிகலா குடும்பத்திற்கு ஒரு ஆசை இருந்தது. என் அத்தையை கொல்ல வேண்டும் என சசிகலாவும் நடராஜனும் தெரிவித்தனர். இதற்கு சிலர் வேண்டாம் என்றனர் என பகீர் தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+