கோழிக்கறி கடை இருக்கே.. "மாட்டிறைச்சி" கடை எங்கே? ஆவேசம் ஜவாஹிருல்லா .. முதல்வருக்கு முக்கிய கோரிக்கை
ஈரோடு அருகே 13 மாட்டிறைச்சி கடைகள் அகற்றப்பட்டதற்கு ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: ஈரோடு புன்செய் அருகே மாட்டிறைச்சி கடைகள் இடிக்கப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அதுகுறித்து தமிழக முதல்வருக்கும் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
ஈரோடு அருகே மாட்டு இறைச்சி கடைகள் இடிக்கப்பட்டதற்கு கண்டனங்கள் கிளம்பி வருகின்றன.. திடீரென எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி, இந்த மாட்டிறைச்சி கடைகள் இடிக்கப்பட்டது ஏன் என்றும் தமிழக அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
இது தொடர்பாக ஈரோடு அருகே அருந்ததியினரின் மாட்டிறைச்சி கடைகள் அகற்றப்பட்ட விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று, முதல்வர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், கடிதம் எழுதியிருந்தார்.

13 குடும்பங்கள்
அத்துடன், மிக முக்கிய கோரிக்கையையும் அதில் விடுத்திருந்தார். "மார்க்கெட்டுக்கு அருகில் மற்ற இறைச்சி கடைகள் எல்லாம் செயல்பட்டு வருகிறது... ஆனால், மாட்டிறைச்சி கடை மட்டும் நடத்த கூடாது என்பது சரிகிடையாது.. இந்த 13 குடும்பங்களின் ஒரே வாழ்வாதாரம் மாட்டிறைச்சி விற்பனை செய்வதுதான்... அப்படி இருக்கும்போது, நிரந்தரமான கடை இப்போது இவர்களுக்கு இல்லாததால் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.. 26 ஏக்கர் பரப்பளவு உள்ள சந்தையில் ஏதோ ஒரு பக்கம் மாட்டிறைச்சி கடை நடத்துவதால் பாதிப்பு எதுவும் ஏற்படப் போவதில்லை..

கலெக்டர்
இருந்தாலும், பொருத்தமான வேறொரு இடத்தில் சுகாதாரமான முறையில் கடைகளை நகராட்சி நிர்வாகமே அமைத்து கொடுத்து பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கலாம். இது தொடர்பாக முதன்மை செயலாளர் (நகராட்சி நிர்வாகம்) முதற்கொண்டு, ஈரோடு மாவட்ட கலெக்டர் மற்றும் நகராட்சி ஆணையருக்கு மனுக்கள் அளித்தும் மக்களின் கோரிக்கைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. அதனால், முதல்வர், இப்பிரச்சனையில் தலையிட்டு பாதிக்கப்பட்ட 13 அருந்ததியர் குடும்பங்களும் மறுபடியும் மாட்டிறைச்சி கடை நடத்த தேவையான நடவடிக்கை எடுத்து உதவிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

13 குடும்பங்கள்
இந்நிலையில், இதே விவகாரத்தை மனிதநேய மக்கள் கட்சி கையில் எடுத்துள்ளது.. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ கண்டனம் தெரிவித்து, தமிழக அரசுக்கு கோரிக்கையும் விடுத்துள்ளார்.. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்குட்பட்ட வாரச் சந்தையில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த 13 குடும்பங்கள் மாட்டிறைச்சிக் கடை நடத்தி வந்துள்ளனர். திடீரென்று எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்காமல் நகராட்சி நிர்வாகம் 22.11.2022 அன்று புல்டோசர் கொண்டு அனைத்துக் கடைகளையும் இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர். கடை நடத்தியவர்கள் தொடர்ச்சியாக நிர்வாகத்தை அணுகி மீண்டும் தொழில் செய்ய கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

சீறும் ஜவாஹிருல்லா
ஆனால் நகராட்சி நிர்வாகம் எந்த அனுமதியும் வழங்கவில்லை. அங்கே கோழி ஆடு மீன் இறைச்சி கடைகள் எல்லாம் செயல்பட்டு வரும் நிலையில் மாட்டிறைச்சி கடை மட்டும் அகற்றப்பட்டு இருப்பது கண்டனத்துக்குரியது. புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்குட்பட்ட வாரச் சந்தை 26 ஏக்கர் பரப்பளவு கொண்டது என தெரிகிறது. இவற்றில் மாட்டுக்கறி கடை மட்டும் அகற்றப்பட்டு இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் நல்லாட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட 13 அருந்ததியர் குடும்பங்களும் மீண்டும் மாட்டிறைச்சி கடை நடத்த தேவையான நடவடிக்கைகளை உடனடியாக நகராட்சி நிர்வாகமும் மாநில அரசும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications