ஆமா.. பேனர் வெச்சது தப்புதான்.. நீதிபதியிடம் ஜெயகோபால் ஒப்புதல்
பேனர் வைத்தது தவறுதான் என்று ஜெயகோபால் ஒப்புதல் அளித்துள்ளார்
Recommended Video
சென்னை: "சட்டவிரோதமாக பேனர் வைத்தது உண்மையா" என்று நீதிபதி கேட்கவும்... "ஆமாம்.. பேனர் வைத்தேன்.. தப்புதான்" என்று கோர்ட்டில் நீதிபதியிடம் ஜெயபால் தெரிவித்துள்ளார்.
2 வாரம் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் கவுன்சிலரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், நேற்று ஒகேனக்கல்லில் தலைமறைவாக இருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்த ஒரு தனியார் ரிசார்ட்டில் ஜெயபால் குடும்பத்துடன் தங்கி இருப்பது தெரியவந்ததும் ரிசார்ட்டை சுற்றி வளைத்து ஜெயகோபாலை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, சென்னைக்கு அவரை அழைத்து வந்தனர். இன்று காலை, 11 மணியளவில் ஆலந்தூர் கோர்ட்டில் ஜெயகோபால் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் நீதிபதி ஸ்டார்லி, "சட்டவிரோதமாக பேனர் வைத்தது உண்மையா?' என்று கேட்டார்.
அதற்கு ஜெயகோபால், "ஆமாம்.. சட்டவிரோதமாக பேனர் வைதேன்.. பேனர் வைத்தது தவறுதான்" என்று நீதிபதியிடம் ஒப்புக்கொண்டார். இதையடுத்து வருகிற அக்டோபர் 11-ந்தேதி வரை 14 நாட்கள் அவரை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் போலீசார், ஜெயகோபாலை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனைக்கு பிறகு புழல் சிறையில் அடைத்தனர்
ஜெயகோபால் கைது பற்றி சுபஸ்ரீ குடும்பத்தினர் கருத்து சொல்லும்போதும், "ஜெயகோபால் கைது நடவடிக்கை கொஞ்சம் நிம்மதியா இருக்கு. ஆனால், அவருக்கு உரிய தண்டனையை கோர்ட்தான் வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டனர்.
நேற்று ரிசார்ட்.. இன்று ஜெயில்.. நாளை சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துவிடாமல் இருக்க கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கிறது. ஜெயகோபாலிடம் இனி நடக்க போகும் விசாரணைக்கு பிறகு சுபஸ்ரீ விவகாரத்தில் முக்கிய திருப்பம் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications