2016-17 வருமானவரித்துறை கணக்குப்படி ஜெ.,விற்கு வங்கியில் ரூ.10 கோடி இருப்பு..ஐகோர்ட்டில் தகவல்
சென்னை: முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதாவிற்கு சொந்தமான, போயஸ் தோட்ட வீடு, ஐதராபாத் வீடு உள்பட 4 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான ரூ.900 கோடிக்கும் மேற்பட்ட சொத்துக்களை நிர்வகிக்க, நிர்வாகி ஒருவரை நியமிக்க கோரிய வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கு விசாரணையின் போது அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது வருமான வரித்துறை.

அந்த அறிக்கையில் 2016-17-ம் ஆண்டிற்கான வருமானவரித்துறை கணக்கின்படி, ஜெயலலிதாவுக்கு ரூ16.37 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 2016-17-ம் ஆண்டிற்கான வருமானவரித்துறை கணக்குப்படி ஜெயலலிதாவிற்கு வங்கியில் ரூ.10 கோடி இருப்பு உள்ளது.
மேலும் 1990-91 முதல் 2011-12 வரை ஜெயலலிதாவுக்கு ரூ10.12 கோடி வரி பாக்கி உள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதே போல 2005-06 முதல் 2011-12 வரை ரூ.6.62 கோடி ஜெயலலிதாவுக்கு வருமான வரி பாக்கி உள்ளதாகவும் வருமான வரித்துறை கூறியுள்ளது.
ஜெயலலிதாவின் சொத்து விவரங்கள் குறித்து, வருமான வரித்துறை துணை ஆணையர் ஷோபா உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி மேற்கண்ட விவரங்களை அறிக்கையாக அளித்துள்ளார்.
வருமானவரித்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, ஜெயலலிதாவுக்கு சொந்தமான ரூ.900 கோடிக்கும் மேற்பட்ட சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி நியமிக்க கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இவ்வழக்கை வரும் ஜுன் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விஜய் அரசுக்கு அக்னி பரீட்சை.. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கேள்வி! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications