சென்னையில் ஐடி ஊழியர் பார்த்த பார்ட் டைம் ஜாப்.. கொட்டிய பணமழை.. போலீசில் மாட்டிவிட்ட மனைவி
சென்னை: சென்னையில் சிலர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பது அவ்வப்போது நடக்கிறது. அவர்கள் குறித்து தகவல்கள் வந்த உடன் போலீசார் உடனே அவர்களை கைது செய்கிறார்கள். கஞ்சா விற்று வரும் பணத்தையும்,அவர்களின் சொத்துக்களையும் போலீசார் பறிமுதல் செய்வதும் நடக்கிறது. இந்நிலையில் சென்னை திருவொற்றியூரில் கஞ்சா விற்றதாக ஐ.டி. ஊழியரை அவரது மனைவி போலீசில் காட்டி கொடுத்தார். இந்த வழக்கில் 2 பேர் கைதாகி இருக்கிறார்கள்
சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்வதாக கைது செய்யப்படும் சம்பவங்களை அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். சென்னையில் இளம் வயது மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், போதையில் இல்லாமல் இருக்க முடியாது என்று சுற்றுபவர்களை குறி வைத்து சிலர் ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து கஞ்சா விற்கிறார்கள். என்ன தான் போலீசார் கஞ்சாவிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தாலும், நூதன முறையில் கடத்தி வந்து விற்பதும் அவ்வப்போது நடக்கிறது.

இதுபற்றி பொதுமக்கள் தகவல் அளித்தால், உடனே போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் இதனை மக்கள் இதனை கண்டு கொள்ளாமல் விடுவதால், பலர் சீரழிந்து வருகிறார்கள். யாராவது ஒரு சிலரே ரகசியமாக போன் செய்து மாட்டிவிடுகிறார்கள்.. அந்த வகையில் ஐடி ஊழியரை அவரது மனைவியே மாட்டிவிட்டுள்ளார்.
சென்னை ஐடி ஊழியர்
சென்னை திருவொற்றியூர் ரேடியன்ஸ் அப்பார்ட்மெண்டில் வசித்து வரும் ராஜாவுக்கு 28 வயது ஆகிறது. பி.டெக். பட்டதாரியான இவர் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். ராஜா தனது நிறுவனத்தில் வேலை செய்யும் சக ஊழியர்களுக்கு கஞ்சா விற்க வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தாராம். அவருக்கு இதில் நல்ல பணம் வந்திருக்கிறதாம்.
கஞ்சா
நேற்று முன்தினம் ராஜா கஞ்சாவை எடை போட்டு சிறிய பொட்டலங்களில் வைத்து வந்ததாக கூறப்படுகிறது. இதை கண்ட அவரது மனைவி அதிர்ச்சி அடைந்து தட்டிகேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ராஜா ஆத்திரத்தில் தனது மனைவியை கையால் தாக்கியுள்ளார். காயமடைந்த மனைவி தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
மாட்டிவிட்ட மனைவி
கணவரின் தவறான போக்கை தண்டிக்கும் வகையில் இதுகுறித்து ராஜாவின் மனைவி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் திருவொற்றியூர் போலீசார் ராஜா வீட்டுக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அதில் 1 கிலோ 200 கிராம் கஞ்சா சிக்கியது. கஞ்சா விற்ற ராஜாவையும் கையும் களவுமாக கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திருவொற்றியூர் வடக்கு ரெயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் வசிக்கும் எம்.பி.ஏ. பட்டதாரி ஹரிஹரன் (25) என்பவரிடமிருந்து கஞ்சாவை வாங்கியதாக கூறினார். இதையடுத்து இந்த வழக்கில் ஹரிஹரனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
அதிகாலையில் வந்த மெயில்.. மீண்டும் வேலையை காட்டிய மெட்டா! ஊழியர்கள் கண்ணீர்! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications