ED சொன்ன போதை பொருள் மாபியா ஜான் பிரிட்டோ நான் இல்லை! லீமா ரோஸின் சகோதரர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "பெயர் ஒற்றுமையால் வந்த குழப்பத்தை வைத்து, என் மீது திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள்" என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ லீமா ரோஸின் சகோதரர் ஜான் பிரிட்டோ பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

சமீபத்தில் அமலாக்கத்துறை (ED) வெளியிட்ட செய்திக்குறிப்பில், 250 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 'ஜான் பிரிட்டோ' என்பவர் மூளையாகச் செயல்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

John Britto

இந்தத் தகவலை சமூக வலைதளங்களில் பலரும், லாட்டரி அதிபர் மார்ட்டினின் உறவினரான ஜான் பிரிட்டோவுடன் தொடர்புபடுத்திப் பேசத் தொடங்கினர்.

இது குறித்து புகார் அளிக்க சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த ஜான் பிரிட்டோ, செய்தியாளர்களிடம் கூறியதாவது: "போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படும் ஜான் பிரிட்டோ என்பவர் பெயரும் என் பெயரும் ஒன்றாக இருப்பதால்தான் இந்த குழப்பம். ஆனால் உண்மையில் அவர் வேறு, நான் வேறு. அந்த போதை பொருள் வழக்கு ஜான் பிரிட்டோ நான் இல்லை. எனக்கும் அந்த வழக்கிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கட்சியினர் குற்றம்சாட்டும் ஜான் பிரிட்டோ யாரென்றே எனக்கு தெரியாது.

என் மீது கேரளாவில் ஒரு லாட்டரி வழக்கு மட்டுமே நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் எனது பெயர், லீமா ரோஸ், மார்ட்டின் மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் மனைவி ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன, ஆதவ் அர்ஜுனாவின் பெயர் அதில் இல்லை.

உண்மை இப்படியிருக்க, மாரிதாஸ் உள்ளிட்ட 51 யூடியூபர்கள் திட்டமிட்டு எனக்கு எதிராகவும், எனது குடும்பத்திற்கு எதிராகவும் அவதூறு வீடியோக்களைப் பதிவிட்டுள்ளனர். என்னைப் பற்றித் தவறான தகவல்களைப் பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சமூக வலைதளங்களில் உள்ள அந்த அவதூறு வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன்." இது போல் ஒரு தகவல் வந்தால் உடனே சம்பந்தப்பட்ட என்னை அழைத்து பத்திரிகையாளர்கள் கேட்டுவிட்டு செய்தியை போட வேண்டும். நான் இங்கு

யார் இந்த ஜான் பிரிட்டோ?

இவர் லாட்டரி மன்னன் என்று அழைக்கப்படும் சாண்டியாகோ மார்ட்டினின் மைத்துனர் மற்றும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ லீமா ரோஸின் சகோதரர் ஆவார். தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா, மார்ட்டினின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

பெயர் குழப்பத்தால் உருவான இந்த விவகாரம், தற்போது அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை இந்தப் புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனவே அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியிருந்த ஜான் பிரிட்டோ நானில்லை என்பதை லீமா ரோஸின் சகோதரர் உறுதிப்படுத்தினார்.

மேலும் இதை யார் பரப்புகிறார்கள் என தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த அவதூறு செய்தியால் என் வீட்டில் மனைவி, மகள் எல்லாம் அழுதுக் கொண்டிருக்கிறார்கள். எனக்கென இந்த சமூகத்தில் இருக்கும் மதிப்பை சீர்குலைக்கும் வகையில் அவதூறு பரப்பப்பட்டுள்ளது என்றார்.

யூடியூபர் மாரிதாஸ் நேற்றைய தினம் மதுரையில் வைத்து கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் அவர் நேற்றைய தினம் அவரது சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+