அதிமுகவுக்கு அதிர்ச்சியளித்த ஜான்பாண்டியன்... ஏமாற்றத்துடன் திரும்பிய அமைச்சர்?
Recommended Video
சென்னை: நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு கோரி தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியனை அமைச்சர் கடம்பூர் ராஜூ சந்தித்து பேசிய நிலையில், அவர் ஆதரவு தருவது பற்றி எந்த உறுதியும் அளிக்கவில்லையாம்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றிபெற்றே தீருவது என்ற லட்சியத்தோடு அதிமுக தேர்தல் பணியாற்றி வருகிறது. இதற்காக திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளிடமும் ஆதரவு கோரப்பட்டு வருகிறது.

தேமுதிக, பாமக, பாஜக, உள்ளிட்ட கட்சிகள் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் ஜாதிக்கட்சிகளையும் அமைச்சர்கள் விடுவதாக இல்லை. ஏற்கனவே புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியிடம் அதிமுக ஆதரவு கேட்டு பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியனிடமும் அதிமுக ஆதரவு கேட்டுள்ளது.
தென்மாவட்டத்தில் கணிசமான வாக்குவங்கிகளை கொண்டது ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம். இதனை மனதில் வைத்து அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி உள்ளிட்டோர் ஜான்பாண்டியனிடம் ஆதரவு கேட்டார்களாம் அவரோ தேர்தல் வந்தால் மட்டுமே உங்களுக்கு என்னை ஞாபகம் வருகிறதா என்றும், இதுவரை பல கோரிக்கைகள் அளித்தும் முதல்வர் அதனைக் கண்டுகொள்ளவில்லை என குமுறியுள்ளார்.
இதனால் திகைத்துப்போன அமைச்சர்கள் இடைத்தேர்தல் முடியட்டும், அதுபற்றி பேசிக்கலாம் என உறுதியளித்துள்ளனர். இருப்பினும் சமாதானம் ஆகாத ஜான்பாண்டியன், உடனே முடிவு சொல்லமுடியாது, கட்சியினரிடம் ஆலோசித்துவிட்டு சொல்கிறேன் எனக் கூறி அனுப்பிவைத்தாராம். இதனால் அதிமுக முகாம் சற்று அதிர்ச்சியில் தான் உள்ளதாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications