உயிருக்கு ஆபத்து.. கடுமையான இதய நோயுடன் போராடும் 6 வயது சிறுவன்! காப்பாற்ற உடனே உதவுங்கள்
சென்னை: கடுமையான இதய நோயால் போராடிக் கொண்டிருக்கும் 6 வயது சிறுவன் தாஷ்விக்கின் உயிரை காப்பாற்ற இன்றே உதவுங்கள். உங்களின் சிறு உதவி கூட சிறுவனின் உயிர் காக்கும் போராட்டத்தில் பெரிய அளவுக்கு பலன் கொடுக்கும்.
திருச்சி லால்குடியை சேர்ந்தவர் முருகானந்தம். தச்சராக வேலை செய்யும் இவர், ஒரு நாளைக்கு 500 லிருந்து 700 வரை தான் சம்பாதிக்கிறார். குடும்ப கஷ்டம், போதிய வேலை இல்லாதது உள்ளிட்ட பிரச்சினைகளால் முருகானந்தத்தின் குடும்பம் மற்ற சாமானிய மக்களின் குடும்பத்தை போல வறுமையிலே வளர்ந்து வருகிறது.

என்னதான் வறுமை இருந்தாலும் இவர்களுக்கென இருந்த ஒரே ஆறுதல் குழந்தை தாஷ்விக்தான். கடந்த 2009 ஆம் ஆண்டு பிறந்த இக்குழந்தைக்கு பிறவி இதய குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. போதிய சிகிச்சை பெற அப்போது முருகானந்தத்திடம் பண வசதி இல்லை. குழந்தை தாஷ்விக் இதயக் குறைபாடு உடன் வளர்ந்து வந்தான். குழந்தைக்கு முதல் கட்ட தடுப்பூசி போடப்பட்ட போது உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் பரிசோதித்ததில் குழந்தையின் இதய குறைபாடு தீவிரமாக மாறி இருப்பது கண்டறியப்பட்டது.
முருகானந்தத்தின் ஒரே மகிழ்ச்சி தாஷ்விக்தான். ஆனால் அக்குழந்தை கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பது முருகானந்தத்தையும் அவரது குடும்பத்தையும் ஒரேடியாக முடக்கியது. ஒரு வழியாக குழந்தைக்கு 2021 ஆம் ஆண்டு முதல் பெரிய இதய அறுவை சிகிச்சை மியாட் மருத்துவமனையில் செய்யப்பட்டது. தற்போது குழந்தை ஆறு வயது சிறுவனாக வளர்ந்து இருக்கிறான்.

கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்த நிலையில், சிறுவன் தாஷ்விக்குக்கு மீண்டும் இதய பிரச்சினை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. தாஷ்விக்கை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். சிறுவன் தற்போது ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான்.
அறுவை சிகிச்சை மருந்துகள் என அனைத்துக்கும் சேர்த்து 4.5 லட்சம் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது. சாதாரண தச்சராக வேலை செய்யும் முருகானந்தத்தால் இவ்வளவு பெரிய தொகையை திரட்ட முடியாது. எனவே சிறுவனின் உயிரை காப்பாற்ற உடனடியாக உதவுங்கள். சிறிய பங்களிப்பு கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications