ஓட்டு போடாட்டி போங்கனு சொன்னதை செய்த மக்கள்.. தம்பிதுரையை ஓவர்டேக் செய்யும் தில் தில் ஜோதிமணி
Recommended Video
சென்னை: கரூர் மக்களவை தொகுதியில் மக்களவை துணை சபாநாயகரும் அத்தொகுதி எம்பியுமான தம்பிதுரையை காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முந்தி வருவதை பார்த்து அக்கட்சியினர் பூரிப்பில் உள்ளனர்.
நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஜோதிமணி தம்பிதுரையை காட்டிலும் அதிக வாக்குகளை பெற்று லீடிங்கில் உள்ளார். இவர் இந்த தேர்தலில் வெற்றி பெறுவாரா என்ற கேள்வி ஏற்பட்டுள்ளது.

முன்னிலை
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஜோதிமணி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு கடும் உழைப்பை கொடுத்துள்ளார். அதுதான் இந்த முன்னிலைக்கு காரணம் என கூறப்படுகிறது.

மக்கள்
மேலும் தம்பிதுரை அங்குள்ள தொகுதி மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் அவர் காவிரி விவகாரத்தில் மோடி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய அவர் தேர்தல் கூட்டணிக்கு பிறகு பாஜகவை எதிர்ப்பதையே கைவிட்டார். இதனால் மக்கள் அவர் மீது கடுங்கோபத்தில் உள்ளனர். மேலு்ம ஓட்டு போட்டால் போடுங்க, இல்லாட்டி போங்க என அலட்சியமாக கூறினார்.

ஆட்சியரை கேள்வி எழுப்பிய ஜோதிமணி
தேர்தல் பிரசாரத்தின்போது ஜோதிமணிக்கு போன் செய்த அந்த மாவட்ட ஆட்சியர், காங்கிரஸ் கட்சியின் குண்டர்கள் தன் வீட்டுக்கு புகார் மனு கொடுக்க வந்து தன்னை மிரட்டியதாக குறிப்பிட்டார். இதை பொறுமையுடன் கேட்ட ஜோதிமணி, உண்மை சம்பவத்தை விளக்கிக் கூறினார்.

நியாயத்தை புரிய வைத்த ஜோதிமணி
அப்போது என்னை மிரட்டுவதாக கூறி கரூர் மக்களவை தொகுதி தேர்தலை நான் நிறுத்த முடியும் என ஜோதிமணியை ஆட்சியர் அச்சுறுத்தினார். ஆனால் ஜோதிமணியோ ஒரு தேர்தலை நிறுத்துவதை அவ்வளவு எளிதாக கூறுகிறீர்களே. இத்தனை பேரின் உழைப்பு என்னவாவது என கேள்வி எழுப்பினார். மேலும் அமைதியான போராட்டங்களில் நிறைய சாதனை புரிந்தவர் ஜோதிமணி. இவரது வெற்றியை கட்சியினர் எதிர்பார்த்து வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications