Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்து வந்த.. நீதிபதி நந்தினி தேவி உட்பட 77 நீதிபதிகள் பணியிடமாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் வரும் மே 13ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என இன்று மாலை அறிவிப்பு வெளியானது. இதற்கிடையே இந்த அறிவிப்பு வெளியான சற்று நேரத்திலேயே பொள்ளாச்சி வழக்கை விசாரித்து வந்த நீதிபதி நந்தினி தேவி உட்பட 77 மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது வழக்கமான பணியிட மாற்றம் என்றே கூறப்படுகிறது.

எப்போதுமே அரசு அதிகாரிகளுக்குக் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். ஒருவர் ஒரே இடத்தில் நீண்ட காலம் பணியாற்றுவதால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கவே இதுபோல அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். அதன்படி இப்போது மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

High court Pollachi case

77 பேர் பணியிட மாற்றம்

இது தொடர்பான அறிவிப்பை உயர் நீதிமன்றப் பதிவாளர் அல்லி அறிக்கை வெளியிட்டார். தமிழகம் முழுக்க மொத்தம் 77 மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி பூந்தமல்லி வெடிகுண்டு வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன் இப்போது கரூர் மாவட்டத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நீதிபதிகள்

அதேபோல சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழில் வேலனும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் சேலம் மாவட்ட கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை போக்சோ நீதிமன்ற நீதிபதியாக இருந்த ராஜலட்சுமி இப்போது விழுப்புரம் குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வந்த நந்தினி தேவி கரூர் குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி சம்பவம்

கடந்த 2018-19 ஆண்டுகளில் தமிழகத்தில் மிகப் பெரியளவில் பரபரப்பைக் கிளப்பிய சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் ஆகும். பெண்கள், மாணவிகள் எனப் பலரையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதை வீடியோ எடுத்து மிரட்டியதாகப் புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக 9 பேர் மீது 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை துரிதமாகவே நீதிமன்றத்தில் நடந்தது. சுமார் 50 சாட்சியங்கள், 200 ஆவணங்கள், மின்னணு தரவுகள் என விரிவான விசாரணை நடத்தப்பட்டது. சிபிஐ இந்த வழக்கை விசாரித்த நிலையில், முக்கிய ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. பெண்கள் தொடர்பான வழக்கு என்பதால் இது முழுக்க முழுக்க க்ளோஸ்ட் டோர் முறையில், அதாவது வெளியாட்களுக்கு அனுமதி இல்லாமலேயே விசாரணை நடத்தப்பட்டது. குறிப்பாகக் கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணை தினசரி நடைபெற்றது. இரு தரப்பு வாதம் இன்று நிறைவடைந்த நிலையில், வரும் மே 13ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தீர்ப்பு என்னவாகும்

இதற்கிடையே தீர்ப்பு தேதி வெளியான கொஞ்ச நேரத்திலேயே நீதிபதி நந்தினி தேவி உள்ளிட்டோர் பணியிட மாற்றம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 77 மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான பணியிட மாற்ற அறிவிப்பு என்றே கூறப்படுகிறது.

இப்போது பணியிட மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், தீர்ப்பு என்னவாகும் என்பதில் பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக அடுத்த சில நாட்களில் விளக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+