நீட் தேர்வு பாதிப்பு- முதல்வர் ஸ்டாலினிடம் நீதிபதி ஏ.கே. ராஜன் குழு 165பக்க அறிக்கை தாக்கல் செய்தது!
சென்னை: நீட் தேர்வு பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு இன்று 165 பக்க அறிக்கையை தாக்கல் செய்தது.
Recommended Video
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இதன் முதல் கட்டமாக நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவில் மொத்தம் 9 பேர் இடம் பெற்றனர். நீட் தேர்வுக்குப் பின்னர் மருத்துவ படிப்புகளில் தமிழக மாணவர்கள் சேர்க்கை எப்படி வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்பது குறித்து இக்குழு ஆராய்ந்தது.

ராஜன் குழுவுக்கு எதிராக வழக்கு
அத்துடன் பொதுமக்களிடம் இருந்தும் கருத்துகளை நீதிபதி ஏ.கே. ராஜன் குழு பெற்றது. இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. பொதுச்செயலாளர் கரு. நாகராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

ஹைகோர்ட் விளாசல்
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நீட் தேர்வு பாதிப்புக்கான குழுவை தமிழக அரசு அமைத்தது செல்லும்; வெறும் விளம்பரத்துக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என கூறி கரு. நாகராஜன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நீதிபதி ராஜன் குழு அறிக்கை
இதனைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நீதிபதி ஏ.கே. ராஜன் குழு சந்தித்தது. இந்த சந்திப்பின் போது தமது குழுவின் அறிக்கையை தாக்கல் செய்தார் நீதிபதி ஏ.கே. ராஜன். இக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும்.

பரிந்துரை மீது எதிர்பார்ப்பு
கடந்த கால திமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றதை முன்னுதாரணமாக காட்டியே உச்சநீதிமன்றத்தில் வாதாடினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்கிற கருத்தை ஏற்கனவே பொது மேடைகளில் நீதிபதி ஏ.கே. ராஜன் வலியுறுத்தி இருந்தார். இதனால் நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவின் பரிந்துரைகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலினிடன் அறிக்கை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி ஏ.கே. ராஜன், மொத்தம் 165 பக்க அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறோம். சுமார் 85,000 பேரிடம் கருத்து கேட்டுள்ளோம். பெரும்பாலானோர் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிலர் இந்த ஆண்டு நடத்தலாம்; 2 ஆண்டுகள் மட்டும் நடத்தலாம் எனவும் கூறி உள்ளனர். இவை அனைத்தும் நாங்கள் தாக்கல் செய்த பரிந்துரையில் இடம்பெற்றுள்ளது. எங்கள் குழுவின் பரிந்துரை விவரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் விவரிப்பார் என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications