சென்னை ஹைகோர்ட்டு "பொறுப்பு" தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி பதவியேற்றார்.. குவிகிறது வாழ்த்துக்கள்
பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள எம்.துரைசாமி இன்று பொறுப்பேற்கிறார்
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி நேற்று ஓய்வுபெற்ற நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள எம்.துரைசாமி இன்று பொறுப்பேற்றார்.
கடந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பொறுப்பேற்றார்.
முதலில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்ற அவர், பிறகு தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.

பிரிவுபச்சார விழா
நேற்றுடன் அவருக்கு 62 வயது நிறைவடைந்ததையடுத்து நேற்று மாலையுடன் ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து நேற்று மாலை உயர்நீதிமன்ற வளாகத்தில் அவருக்கு பிரிவு உபசார பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பிரிவு உபசார நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மற்றும் வழக்கறிஞர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

எம்.துரைசாமி
முனீஸ்வர் நாத் பண்டாரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ள நிலையில், ஓய்வுக்கு பிறகு அந்நிய செலவாணி மோசடி தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் மேல்முறையீட்டு தீர்ப்பாய தலைவராக பதவியேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.. இதற்கிடையே உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி எம்.துரைசாமியை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

பொறுப்பு நீதிபதி
அதன்படி இன்று அவர் பொறுப்பு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.இவர் ஏற்கனவே நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட போது, பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதியின் உத்தரவின்படி, சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி இன்று காலை பதவி ஏற்றுக் கொண்டார்.. இந்தப் பதவி ஏற்பு நிகழ்ச்சி தலைமை நீதிபதி சேம்பரில் நடைபெற்றது.. பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமிக்கு சக நீதிபதிகள், மத்திய-மாநில அரசு வக்கீல்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஜனாதிபதி
அதைத்தொடர்ந்து, இதுவரை தலைமை நீதிபதி விசாரித்து வந்த பொதுநல வழக்கு உள்ளிட்ட வழக்குகளை, ஹைகோர்ட்டின் முதல் அமர்வில் அமர்ந்து சக நீதிபதியுடன் சேர்ந்து பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி விசாரிப்பார் என தெரிகிறது.. தலைமை நீதிபதி ஓய்வு பெற்றதை தொடர்ந்து சென்னை ஹைகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதியை இதுவரை இந்திய ஜனாதிபதி நியமிக்கவில்லை. கேரளா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஐகோர்ட்டுகளின் மூத்த நீதிபதிகள் இருவரில் ஒருவரை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக விரைவில் ஜனாதிபதி நியமிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications