எம்பிசி டூ எஸ்டி.. 60 ஆண்டு கால கனவு.. நிறைவேற்றிய பிரதமருக்கு நன்றி.. நரிக்குறவ பெண் அஸ்வினி வீடியோ
சென்னை: மிகவும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து பழங்குடியினத்தவர் பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்பது எங்களுடைய 60 ஆண்டு கால கனவு என நரிக்குறவ பெண் அஸ்வினி தெரிவித்த வீடியோவை பாஜக அண்ணாமலை தனது ட்விட்டரில் ஆங்கில மொழிப்பெயர்ப்புடன் வெளியிட்டுள்ளார்.
மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் நரிக்குறவ பெண் அஸ்வினி. இவரும் இவரது சமூகத்தை சேர்ந்தவர்களும் அங்குள்ல ஸ்தல நாராயண பெருமாள் கோயிலுக்கு சென்றனர்.
அங்கு அன்னதான திட்டத்தில் சாப்பிட உட்கார்ந்த போது அவர்கள் அங்குள்ள கோயில் நிர்வாக அதிகாரிகளால் விரட்டியடிக்கப்பட்டனர். தங்களுக்கு நேர்ந்த அவமானத்தை அஸ்வினி வீடியோவாக வெளியிட்டிருந்தார்.

அன்னதான திட்டம்
இது மிகவும் வைரலானது. இதையடுத்து அன்னதான திட்டத்தில் நரிக்குறவர்களுடன் அமர்ந்து அமைச்சர் சேகர்பாபு உணவு உட்கொண்டார். மேலும் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது நரிக்குறவர்களுக்கு நலத்திட்டங்களை முதல்வர் வழங்கினார். மேலும் அஸ்வினியின் வீட்டிற்கு சென்று அவரை திக்குமுக்காட வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

நரிக்குறவர்களின் கோரிக்கை
இதையடுத்து ஒட்டுமொத்த நரிக்குறவர்களின் கோரிக்கையான தங்கள் ஜாதியை எம்பிசி பிரிவிலிருந்து எஸ்டி பிரிவுக்கு மாற்ற வேண்டும் என முதல்வரிடம் தெரிவித்தனர். இந்த மாற்றம் இருந்தால் நாங்களும் பிறரை போல் சமுதாயத்தில் நல்ல உயர்வை எட்டுவோம் என கோரினர். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் இந்த கோரிக்கையை கடிதமாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த மார்ச் மாதம் எழுதியிருந்தார்.

பழங்குடியினத்தவர் பட்டியல்
இந்த நிலையில் பழங்குடியினத்தவர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்டோரை சேர்க்க மத்திய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழகம் முழுவதும் உள்ள நரிக்குறவ மக்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி கூறி வருகிறார்கள். அது போல் பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிக்கிறார்கள்.

பாஜக தலைவர் அண்ணாமலை
அத்தகைய வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நரிக்குறவ பெண் அஸ்வினி பேசுகையில் , வணக்கம் என் பேரு அஸ்வினி, மகாபலிபுரம் பூஞ்சேரி கிராமத்தில் இருந்து பேசுகிறேன். மிகவும் தாழ்த்தப்பட்ட பிரிவிலிருந்து நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியின பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்பது எங்களுடைய 60 ஆண்டு கால கனவு.

சலுகையே இல்லை
எங்கள் குலத்து பிள்ளைகள் படித்திருந்தாலும் அவர்களுக்கு அரசு வேலையோ அரசு சலுகைகளோ கிடைக்கவில்லை. இதனால் படித்த படிப்பு வீணாகிவிட்டதே என சும்மா உட்கார்ந்திருந்தார்கள். எம்பிசியிலிருந்து எஸ்டிக்கு மாற்றுமாறு எங்கள் கோரிக்கையை ஏற்று பிரதமர் மோடி மாற்றியுள்ளார்.

மோடி அய்யாவுக்கு நன்றி
இதனால் எங்கள் வேலைகள் கிடைக்கும் என எங்கள் சமூகத்து மக்கள் நம்புகிறார்கள். எங்கள் சமூகத்து குழந்தைகள் உயர் கல்விக்கு செல்வார்கள், அரசு வேலைகளில் அமருவார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது. பழங்குடியினர் பிரிவுக்கு எங்கள் சமூகத்தை மாற்றி கொடுப்பதாக அறிவித்த மோடி அய்யாவுக்கு மீண்டும் நன்றி என்றார்.
-
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக்












Click it and Unblock the Notifications