அரைவேக்காடு ஒருவர்.. அரை சதவீதம் அறிவாவது இருக்கா அவருக்கு? பொதுக்கூட்டத்தில் சீறிய கே.பாலகிருஷ்ணன்!
சென்னை : அரைவேக்காடு ஆளுநருக்கு 13 வயது கருணாநிதியின் அறிவில் அரை சதமானம் கூட இல்லை என மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார் சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.
மறைம்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சென்னை புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் பொதுக்கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றியுள்ளனர்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய சி.பி.ஐ.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். ஆளுநர் ரவி தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதைச் சுட்டிக்காட்டி அவர் விமர்சித்துள்ளார்.
கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், "13 வயதிலே ஒரு சரித்திர நாவலை எழுதியவர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது கலைஞர் கருணாநிதி தான். 13 வயதில் எப்படி ஒருவர் ஒரு நாவலை எழுத முடியும்? இந்தத் தகவல் இட்டுக்கட்டியதாக இருக்கக்கூடும் என்று நினைத்து வரலாற்று ஆசிரியர்களை விசாரித்தால், அவர் எழுதிய செல்வ சந்திரா நாவலின் ஒரு பாதி முரசொலி அலுவலகத்தில் இருக்கிறது என்ற தகவலைச் சொல்கிறார்கள்.
அதன் முன்னுரையிலே கருணாநிதி 13 வயதில் எழுதியது: இன்றைய திராவிட நாடு அதன் கலைகளையும், நாகரிகத்தையும் இழந்து சாதிய மூடநம்பிக்கைகளில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழை அழித்தொழிக்க சதி வேலைகள் தொடங்கி இருக்கின்றன. திராவிடர்கள் விழித்தெழ வேண்டிய தருணம் இது என எழுதி இருக்கிறார். அதில் ஒரு எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை இல்லாமல் எழுதி இருக்கிறார்.
13 வயதிலேயே சரித்திர நாவல் எழுதும் அளவுக்கு, திராவிட நாட்டைப் புரிந்துகொண்டு எழுதும் அளவுக்கு ஒரு தனி வார்ப்பாக கருணாநிதி இருந்திருக்கிறார். ஆனால், இன்று சென்னை ஆளுநர் மாளிகையில் அமர்ந்திருக்கும் அரைவேக்காடு ஆளுநருக்குக் கருணாநிதியின் அந்த அறிவில் அரை சதமானம் கூட இல்லை என்பது வேதனையாக இருக்கிறது.

திராவிடத்தைப் பற்றி, தமிழ்நாட்டைப் பற்றி, தமிழைப் பற்றி, தமிழர்களின் தொழில் வளத்தைப் பற்றி என்னவெல்லாம் பேசுகிறார் ஆளுநர்? அரசின் மாளிகையில் அமர்ந்துகொண்டு என்ன வேண்டுமானாலும் பேசலாமா?
இந்தியாவில் எத்தனையோ தலைவர்கள் இருந்தாலும் தலைவர் கருணாநிதி போல் யாருமில்லை. எந்த ஒரு கட்சியும் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும் என்று நினைப்பார்கள். நாட்டிற்கு ஒரு பிரச்சனை வரும்போது அப்பிரச்சனையை விடப் பதவி முக்கியமல்ல என எண்ணியவர் கருணாநிதி. இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீட்டைச் சட்ட பாதுகாப்போடு கொடுத்தவர் கருணாநிதி. அருந்ததிய மக்களுக்கு 3% இட ஒதுக்கீட்டைக் கொடுத்தவர் கருணாநிதி.
இன்று சனாதனத்தை அரியணை ஏற்ற நினைக்கிறார்கள். கருணாநிதிக்கான நூற்றாண்டு விழா சனாதனத்திற்குச் சாவுமணி அடிக்கும் விழாவாக உள்ளது. அன்று தேசம் தலைவர் கருணாநிதியை எதிர்பார்த்தது. அதுபோன்று இன்று சனாதனத்தை வீழ்த்த தலைவர் ஸ்டாலின் அவர்களை எதிர்பார்க்கிறது" என உரையாற்றினார்.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எப்படி வழங்கப்படும்? இப்போதே திட்டத்தை கையில் எடுக்கும் திமுக? கசிந்த தகவல்! -
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
ரூ.8,000 கூப்பன்.. திமுகவிற்கு வார்னிங் கொடுத்த தமிழக தேர்தல் அதிகாரி -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
ரூ.5000 + ரூ.8000.. ஸ்டாலின் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. பெண்களை தேடி வரப்போகும் பணம்! -
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications