செந்தில்குமார் எம்.பி. வன்னியர் என்பதால் அவர் மீது வன்மத்தை கக்குவதா? காடுவெட்டி குரு மகள் ஆதங்கம்!
சென்னை: தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் எம்.பி.க்கு மற்றவர்கள் எவ்வளவு அழுத்தத்தை கொடுத்தாலும் வன்னிய குல சத்திரியர்களாக நாங்கள் துணை நிற்போம் என மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை தெரிவித்துள்ளார்.
செந்தில்குமார் வன்னியர் என்பதால் வன்மத்தோடு சிலர் சமூக வலைதளங்களில் அவரை இழிவு படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியுள்ளார். இது குறித்து காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை விடுத்துள்ள பதிவு வருமாறு;

''பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் அண்ணன் டாக்டர் திரு. செந்தில் குமார் (தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்கள் தவறுதலாக சில வார்த்தைகளை பேசி உள்ளதாக சிலர் குறிப்பிடுகின்றனர். அவரே அவர் பேசிய வார்த்தைகள் தவறு என்று கூறி தான் பேசிய வார்த்தைகளை திரும்ப பெற்றுள்ளார். மேலும் பாராளுமன்ற அவைக்குறிப்பில் இருந்தும் தான் பேசிய வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று அவை தலைவருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இவ்வாறு இருக்கும் பொழுது அண்ணன் டாக்டர் திரு.செந்தில் குமார் அவர்கள் வன்னியர் என்பதால் வன்மத்தோடு சிலர் சமூக வலைதளங்களில் அண்ணன் அவர்களை இழிவு படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது.அவர் பேசியது தவறு என்றால் அவர் பேசிய கருத்துக்கு எதிர்வினை ஆற்றுங்கள் அவரை தனிப்பட்ட முறையில் தாக்குவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அண்ணன் அவர்களுக்கு மற்றவர்கள் எவ்வளவு அழுத்தத்தை கொடுத்தாலும் வன்னிய குல சத்திரியர்களாக நாங்கள் அண்ணன் அவர்களுக்கு துணையாக நிற்போம்.'' இவ்வாறு தெரிவித்துள்ளார். வட மாநிலங்கள் குறித்து செந்தில்குமார் எம்.பி. கூறிய கருத்து ஒன்று பெரும் சர்ச்சையானதை அடுத்து முதலமைச்சர் ஸ்டாலினே நேரடியாக அவரை தொடர்பு கொண்டு கடுமையாக கண்டித்ததால் செந்தில்குமார் தனது கருத்தை வாபஸ் பெற்று மன்னிப்புக் கோரினார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications