அடிச்சது ஜாக்பாட்! கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மேலும் 1 லட்சம் வீடுகள் கட்ட நிதி விடுவித்தது அரசு
சென்னை: கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் ரூ.3,500 கோடியில் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதி வழங்கி உள்ளது.
அண்மையில் சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில் அரசாணை வெளியிட்டுள்ளது. முதல் கட்டமாக 500 கோடி ரூபாய் நிதியை விடுவிக்கவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், கூடுதலாக ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தரப்பட உள்ளது.

குடிசையில்லா தமிழகம் என்ற இலக்கை எட்டும் வகையில், வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் இதுவரை 2 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டு ஒரு லட்சம் வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ஒரு லட்சம் வீடுகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி ஒரு வீட்டிற்கு 3.50 ரூபாய் லட்சம் என்ற அடிப்படையில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட 3500 கோடி ரூபாய் நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக முதல் கட்டமாக 500 கோடி ரூபாய் நிதியை விடுவிக்கவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே?












Click it and Unblock the Notifications