அடிச்சது ஜாக்பாட்! கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மேலும் 1 லட்சம் வீடுகள் கட்ட நிதி விடுவித்தது அரசு
சென்னை: கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் ரூ.3,500 கோடியில் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதி வழங்கி உள்ளது.
அண்மையில் சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில் அரசாணை வெளியிட்டுள்ளது. முதல் கட்டமாக 500 கோடி ரூபாய் நிதியை விடுவிக்கவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், கூடுதலாக ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தரப்பட உள்ளது.

குடிசையில்லா தமிழகம் என்ற இலக்கை எட்டும் வகையில், வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் இதுவரை 2 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டு ஒரு லட்சம் வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ஒரு லட்சம் வீடுகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி ஒரு வீட்டிற்கு 3.50 ரூபாய் லட்சம் என்ற அடிப்படையில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட 3500 கோடி ரூபாய் நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக முதல் கட்டமாக 500 கோடி ரூபாய் நிதியை விடுவிக்கவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications